தேசு விமான நிலையத்தில் புதிய உள்கட்டமைப்பை ஜோதிராதித்யா சிந்தியா செப்டம்பர் 24 அன்று திறந்து வைக்கிறார்!
Nov 18, 2025, 12:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசு விமான நிலையத்தில் புதிய உள்கட்டமைப்பை ஜோதிராதித்யா சிந்தியா செப்டம்பர் 24 அன்று திறந்து வைக்கிறார்!

Web Desk by Web Desk
Sep 20, 2023, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசு விமான நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பைத் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா  சிந்தியா, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு ஆகியோர் வரும் 24-ந் தேதியன்று திறந்து வைக்கிறார்கள்.

அருணாச்சல பிரதேசத்தின் லோஹித் மாவட்டத்தின் தலைமையகமான லோஹித் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் தேசு ஆகும். இந்த நகரம், சுற்றிலும் பசுமையான காடுகள் மற்றும் மலைகள் நிறைந்து, இயற்கை அழகுக்கு பெயர் பெற்றது.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தேசு நகரத்தில் அமைந்துள்ள தேசு விமான நிலையம் என்பது ஒரு உள்நாட்டு விமான நிலையமாகும். இது ஒரே ஓடுபாதை மூலம் இயங்குகிறது. இந்த விமான நிலையம் 212 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இது ஏடிஆர் 72 வகை விமானங்களுக்கான நடவடிக்கைகளை கையாளும் திறன் கொண்டது. மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க தேசு விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான மேம்பாட்டுப்பணிகளை இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டது.

ரூ.170 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஓடுபாதை விரிவாக்கம் (1500 மீ x 30 மீ), இரண்டு புதிய ஏப்ரான்கள் கட்டுதல், ஏடிஆர் 72 வகை விமானம் வருவதற்குரிய புதிய முனையக் கட்டிடம், தீயணைப்பு நிலையம், ஏடிசி கோபுரம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஆர்.சி.எஸ் உடான் திட்டத்தின் கீழ் தேசு விமான நிலையம் 2018 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த விமான நிலையம் தற்போது அலையன்ஸ் ஏர் & ஃப்ளைபிக் ஏர்லைன்ஸின் வழக்கமான விமானங்கள் மூலம் திப்ருகார், இம்பால் மற்றும் குவஹாத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

முனையக் கட்டிடத்தின் சிறப்பம்சங்கள்:

· முனையப் பகுதி: 4000 சதுர மீட்டர்.

· பீக் ஹவர் சேவை திறன்: 300 பயணிகள்

· செக்-இன் கவுண்டர்கள்: 05 + (எதிர்காலத்தில் 03)

· வருகை கன்வேயர்கள் : 02

· விமான பார்க்கிங் பகுதிகள்: 02 – ஏடிஆர் -72 வகை விமானம்.

திட்டத்தின் நன்மைகள்

· அதிக போக்குவரத்தை கையாள விமான நிலைய திறனை விரிவுபடுத்துதல்.

· வடகிழக்கு பிராந்தியத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் சிறந்த இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.

· சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல்.

· பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவித்தல்.

 

Tags: airport
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் இரட்டை வேடம்: அமித்ஷா கடும் தாக்கு!

Next Post

இளைஞர்களுக்கு விராட் கோலி அறிவுரை!

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies