தேசு விமான நிலையத்தில் புதிய உள்கட்டமைப்பை ஜோதிராதித்யா சிந்தியா செப்டம்பர் 24 அன்று திறந்து வைக்கிறார்!
Jul 31, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசு விமான நிலையத்தில் புதிய உள்கட்டமைப்பை ஜோதிராதித்யா சிந்தியா செப்டம்பர் 24 அன்று திறந்து வைக்கிறார்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2023, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசு விமான நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பைத் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா  சிந்தியா, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு ஆகியோர் வரும் 24-ந் தேதியன்று திறந்து வைக்கிறார்கள்.

அருணாச்சல பிரதேசத்தின் லோஹித் மாவட்டத்தின் தலைமையகமான லோஹித் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் தேசு ஆகும். இந்த நகரம், சுற்றிலும் பசுமையான காடுகள் மற்றும் மலைகள் நிறைந்து, இயற்கை அழகுக்கு பெயர் பெற்றது.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தேசு நகரத்தில் அமைந்துள்ள தேசு விமான நிலையம் என்பது ஒரு உள்நாட்டு விமான நிலையமாகும். இது ஒரே ஓடுபாதை மூலம் இயங்குகிறது. இந்த விமான நிலையம் 212 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இது ஏடிஆர் 72 வகை விமானங்களுக்கான நடவடிக்கைகளை கையாளும் திறன் கொண்டது. மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க தேசு விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான மேம்பாட்டுப்பணிகளை இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டது.

ரூ.170 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஓடுபாதை விரிவாக்கம் (1500 மீ x 30 மீ), இரண்டு புதிய ஏப்ரான்கள் கட்டுதல், ஏடிஆர் 72 வகை விமானம் வருவதற்குரிய புதிய முனையக் கட்டிடம், தீயணைப்பு நிலையம், ஏடிசி கோபுரம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஆர்.சி.எஸ் உடான் திட்டத்தின் கீழ் தேசு விமான நிலையம் 2018 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த விமான நிலையம் தற்போது அலையன்ஸ் ஏர் & ஃப்ளைபிக் ஏர்லைன்ஸின் வழக்கமான விமானங்கள் மூலம் திப்ருகார், இம்பால் மற்றும் குவஹாத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

முனையக் கட்டிடத்தின் சிறப்பம்சங்கள்:

· முனையப் பகுதி: 4000 சதுர மீட்டர்.

· பீக் ஹவர் சேவை திறன்: 300 பயணிகள்

· செக்-இன் கவுண்டர்கள்: 05 + (எதிர்காலத்தில் 03)

· வருகை கன்வேயர்கள் : 02

· விமான பார்க்கிங் பகுதிகள்: 02 – ஏடிஆர் -72 வகை விமானம்.

திட்டத்தின் நன்மைகள்

· அதிக போக்குவரத்தை கையாள விமான நிலைய திறனை விரிவுபடுத்துதல்.

· வடகிழக்கு பிராந்தியத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் சிறந்த இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.

· சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல்.

· பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவித்தல்.

 

Tags: airport
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் இரட்டை வேடம்: அமித்ஷா கடும் தாக்கு!

Next Post

இளைஞர்களுக்கு விராட் கோலி அறிவுரை!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies