இந்தியாவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Nov 17, 2025, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நேபாளத்திலும் அதிகரித்து வருவதாக தகவல்!

Web Desk by Web Desk
Sep 20, 2023, 08:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல, நேபாளத்திலும் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் நேபாளத்தில் 1900-ம் ஆண்டுகளில் 100 ஆகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை, தற்போது 4014-க்கும் அதிகமாக உள்ளது. உலக காண்டாமிருக தினத்திற்கு முன்னதாக சர்வதேச காண்டாமிருக அறக்கட்டளை வெளியிட்டுள்ள “காண்டாமிருகத்தின் நிலை” ( state of the Rhino ) என்னும் அறிக்கையில், வனவிலங்கு பாதுகாப்பும், வனவிலங்கின் வாழ்விடத்தின் விரிவாக்கமும்தான் காண்டாமிருகங்கள் அதிகரிப்புக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.

2011-ம் ஆண்டு முதல் உலக காண்டாமிருக தினம் செப்டம்பர் 22 அன்று சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. ஒரு கொம்பு காண்டாமிருகம் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் பட்டியலில் அழிந்துவரும் விலங்குகள் பட்டியலின் கீழ் உள்ளது. இந்தியாவில் காண்டாமிருகங்கள் அசாம் , மேற்கு வங்கம் மற்றும் பீகார் பகுதிகளில் காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் அசாமில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் வேட்டையாடுவது பரவலாக இருந்தது அதை கட்டுப்படுத்த பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த ஆண்டு அசாம் அரசாங்கம் வட-மத்திய அசாமில் உள்ள ஒராங் தேசிய பூங்காவிற்கு சுமார் 200 சதுர கி.மீ பரப்பளவை அதிகப்படுத்தியது. மேலும் ஒராங் தேசியப் பூங்கா இப்போது புர்ஹாசபோரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அசாமில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் 27 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டது அதை தொடர்ந்து போடப்பட்ட பாதுகாப்பிற்கு பிறகு 2022 ஆம் ஒரு காண்டாமிருகம் கூட வேட்டையாடப்படவில்லை இந்நிலையில் இந்த ஆண்டு காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் மனாஸ் தேசியப் பூங்காவில் 2 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து காண்டாமிருக கொம்புகளில் மருத்துவ பொருட்களோ இல்லை வேற எந்த பொருட்களோ செய்யக்கூடாது என்று அசாம் அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் கண்டுபிடிக்கப்பட்ட காண்டாமிருக கொம்புகளை அரசாங்கம் எரித்துவிட்டது.

இதுமட்டுமின்றி பிற நாடுகளில் வெள்ளை காண்டாமிருங்கங்களை வேட்டையாடுவது அதிகரித்து வருவதால் வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கைத் தொடர்ந்துக் குறைந்து வருகிறது என்று IRF தெரிவித்துள்ளது.

உலகின் ஐந்து காண்டாமிருக இனங்கள் உள்ளது. அதில் கருப்பு காண்டாமிருகங்கள் மற்றும் பெரிய ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்கள் , எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில் வெள்ளை காண்டாமிருகங்கள் மற்றும் சுமத்ரான் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஜாவான் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அறியப்பவில்லை என்று அறிக்கை கூறியுள்ளது.

Tags: IndianepalRhinocerosincrease
ShareTweetSendShare
Previous Post

சிவன் வடிவில் புதிய கிரிக்கெட் மைதானம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட்: பாடலை வெளியிட்டது ஐ.சி.சி.!

Related News

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு – நீதிமன்ற புறக்கணிப்பை அறிவித்த பாகிஸ்தான் வழக்கறிஞர்கள்!

மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் கொடுக்கத்தான் வேண்டும் – டாஸ்மாக் ஊழியர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!

திருவள்ளூர் : பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கத்தில் கூடுதல் நீர்திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 1,200 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்!

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்!

கவனம் ஈர்க்கும் மஞ்சு வாரியரின் ஆரோ குறும்படம்!

யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை : ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சா்

மயிலாடுதுறை : மயூரநாதர் கோவிலில் முடவன் முழுக்கு தீர்த்தவாரி உற்சவம்!

கரூர் : ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு!

கிராண்டு விட்டாரா காரை ரீகால் செய்திருக்கும் மாருதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies