இந்தியாவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Sep 12, 2026, 08:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நேபாளத்திலும் அதிகரித்து வருவதாக தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 20, 2023, 08:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல, நேபாளத்திலும் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் நேபாளத்தில் 1900-ம் ஆண்டுகளில் 100 ஆகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை, தற்போது 4014-க்கும் அதிகமாக உள்ளது. உலக காண்டாமிருக தினத்திற்கு முன்னதாக சர்வதேச காண்டாமிருக அறக்கட்டளை வெளியிட்டுள்ள “காண்டாமிருகத்தின் நிலை” ( state of the Rhino ) என்னும் அறிக்கையில், வனவிலங்கு பாதுகாப்பும், வனவிலங்கின் வாழ்விடத்தின் விரிவாக்கமும்தான் காண்டாமிருகங்கள் அதிகரிப்புக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.

2011-ம் ஆண்டு முதல் உலக காண்டாமிருக தினம் செப்டம்பர் 22 அன்று சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. ஒரு கொம்பு காண்டாமிருகம் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் பட்டியலில் அழிந்துவரும் விலங்குகள் பட்டியலின் கீழ் உள்ளது. இந்தியாவில் காண்டாமிருகங்கள் அசாம் , மேற்கு வங்கம் மற்றும் பீகார் பகுதிகளில் காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் அசாமில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் வேட்டையாடுவது பரவலாக இருந்தது அதை கட்டுப்படுத்த பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த ஆண்டு அசாம் அரசாங்கம் வட-மத்திய அசாமில் உள்ள ஒராங் தேசிய பூங்காவிற்கு சுமார் 200 சதுர கி.மீ பரப்பளவை அதிகப்படுத்தியது. மேலும் ஒராங் தேசியப் பூங்கா இப்போது புர்ஹாசபோரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அசாமில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் 27 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டது அதை தொடர்ந்து போடப்பட்ட பாதுகாப்பிற்கு பிறகு 2022 ஆம் ஒரு காண்டாமிருகம் கூட வேட்டையாடப்படவில்லை இந்நிலையில் இந்த ஆண்டு காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் மனாஸ் தேசியப் பூங்காவில் 2 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து காண்டாமிருக கொம்புகளில் மருத்துவ பொருட்களோ இல்லை வேற எந்த பொருட்களோ செய்யக்கூடாது என்று அசாம் அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் கண்டுபிடிக்கப்பட்ட காண்டாமிருக கொம்புகளை அரசாங்கம் எரித்துவிட்டது.

இதுமட்டுமின்றி பிற நாடுகளில் வெள்ளை காண்டாமிருங்கங்களை வேட்டையாடுவது அதிகரித்து வருவதால் வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கைத் தொடர்ந்துக் குறைந்து வருகிறது என்று IRF தெரிவித்துள்ளது.

உலகின் ஐந்து காண்டாமிருக இனங்கள் உள்ளது. அதில் கருப்பு காண்டாமிருகங்கள் மற்றும் பெரிய ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்கள் , எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில் வெள்ளை காண்டாமிருகங்கள் மற்றும் சுமத்ரான் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஜாவான் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அறியப்பவில்லை என்று அறிக்கை கூறியுள்ளது.

Tags: IndianepalRhinocerosincrease
Share
Tweet
SendShare
Previous Post

சிவன் வடிவில் புதிய கிரிக்கெட் மைதானம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட்: பாடலை வெளியிட்டது ஐ.சி.சி.!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies