கனடா காலிஸ்தான் தீவிரவாதிகள் பட்டியல்: என்.ஐ.ஏ. வெளியீடு!
Mar 15, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடா காலிஸ்தான் தீவிரவாதிகள் பட்டியல்: என்.ஐ.ஏ. வெளியீடு!

சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 21, 2023, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவுகள் வலுவிழந்திருக்கும் நிலையில், கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாத கும்பல் வலையமைப்புடன் தொடர்புடைய 43 பேரின் விவரங்களை தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.) வெளியிட்டிருக்கிறது.

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நஜர், மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். மேலும், அந்நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரியையும் வெளியேற்றியது. இதற்கு பதலடியாக இந்தியாவுக்கான கனடா நாட்டின் உயர் தூதரக அதிகாரியை மத்திய அரசு வெறியேற்றியது. இதனால், இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், கனடா நாட்டுடன் தொடர்புடைய காலிஸ்தான் தீவிரவாதிகள் 43 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மேலும், மேற்கண்ட 43 பேரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை கையில் எடுத்திருக்கும் என்.ஐ.ஏ., அந்த 43 நபர்களுக்கும் சொந்தமான சொத்துக்கள், வணிகங்கள் பற்றிய தகவல்களைப் பகிருமாறு மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இவை மத்திய அரசால் கையகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது தவிர, 43 பேரின் வணிகக் கூட்டாளிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் சேகரிப்பு முகவர்களின் விவரங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு, லாரன்ஸ் பிஷ்னோய், ஜஸ்தீப் சிங், கலா ஜாதேரி என்கிற சந்தீப், வீரேந்திர பிரதாப் என்கிற கலா ராணா மற்றும் ஜோகிந்தர் சிங் ஆகியோரின் படங்களையும் தேசிய புலனாய்வு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

மேலும், மேற்கண்ட 5 பேரும் என்.ஐ.ஏ. வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும், இவர்களின் பெயரிலோ அல்லது இவர்களது கூட்டாளிகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரிலோ சொத்துக்கள், வணிகம் பற்றிய தகவல் இருந்தால், கீழ்க்கண்ட வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கவும் என்று கூறி, +91 7290009373 என்கிற செல்போன் எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு, இந்த கும்பல்களில் பெரும்பாலோர் கனடாவைச் சேர்ந்தவர்கள் என்றும் என்.ஐ.ஏ. நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Tags: CanadakhalistanNiaterrorist
ShareTweetSendShare
Previous Post

இலங்கை காங்கேசன்துறை இடையேயான படகு சேவை- அண்ணாமலை மகிழ்ச்சி!

Next Post

 காலிஸ்தான் ஆதரவாளர் சுக்தோல் சிங் அலியாஸ் சுகா கொல்லப்பட்டார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies