கனடா காலிஸ்தான் தீவிரவாதிகள் பட்டியல்: என்.ஐ.ஏ. வெளியீடு!
Apr 29, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடா காலிஸ்தான் தீவிரவாதிகள் பட்டியல்: என்.ஐ.ஏ. வெளியீடு!

சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 21, 2023, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவுகள் வலுவிழந்திருக்கும் நிலையில், கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாத கும்பல் வலையமைப்புடன் தொடர்புடைய 43 பேரின் விவரங்களை தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.) வெளியிட்டிருக்கிறது.

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நஜர், மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். மேலும், அந்நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரியையும் வெளியேற்றியது. இதற்கு பதலடியாக இந்தியாவுக்கான கனடா நாட்டின் உயர் தூதரக அதிகாரியை மத்திய அரசு வெறியேற்றியது. இதனால், இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், கனடா நாட்டுடன் தொடர்புடைய காலிஸ்தான் தீவிரவாதிகள் 43 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மேலும், மேற்கண்ட 43 பேரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை கையில் எடுத்திருக்கும் என்.ஐ.ஏ., அந்த 43 நபர்களுக்கும் சொந்தமான சொத்துக்கள், வணிகங்கள் பற்றிய தகவல்களைப் பகிருமாறு மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இவை மத்திய அரசால் கையகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது தவிர, 43 பேரின் வணிகக் கூட்டாளிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் சேகரிப்பு முகவர்களின் விவரங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு, லாரன்ஸ் பிஷ்னோய், ஜஸ்தீப் சிங், கலா ஜாதேரி என்கிற சந்தீப், வீரேந்திர பிரதாப் என்கிற கலா ராணா மற்றும் ஜோகிந்தர் சிங் ஆகியோரின் படங்களையும் தேசிய புலனாய்வு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

மேலும், மேற்கண்ட 5 பேரும் என்.ஐ.ஏ. வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும், இவர்களின் பெயரிலோ அல்லது இவர்களது கூட்டாளிகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரிலோ சொத்துக்கள், வணிகம் பற்றிய தகவல் இருந்தால், கீழ்க்கண்ட வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கவும் என்று கூறி, +91 7290009373 என்கிற செல்போன் எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு, இந்த கும்பல்களில் பெரும்பாலோர் கனடாவைச் சேர்ந்தவர்கள் என்றும் என்.ஐ.ஏ. நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Tags: CanadakhalistanNiaterrorist
ShareTweetSendShare
Previous Post

இலங்கை காங்கேசன்துறை இடையேயான படகு சேவை- அண்ணாமலை மகிழ்ச்சி!

Next Post

 காலிஸ்தான் ஆதரவாளர் சுக்தோல் சிங் அலியாஸ் சுகா கொல்லப்பட்டார்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies