மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்: பிரதமர் மோடி நன்றி!
Aug 15, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்: பிரதமர் மோடி நன்றி!

மாநிலங்களவையில் இன்று தாக்கல்!

Web Desk by Web Desk
Sep 21, 2023, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு பெண்களின் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும் என்றார்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்ததற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

பின்னர், இதுகுறித்துப் பேசிய பிரதமர் மோடி, “இது இந்தியாவின் நாடாளுமன்றப் பயணத்தின் பொன்னான தருணம். இந்த சபையின் அனைத்து உறுப்பினர்களும், இந்த பொன்னான தருணத்திற்கு தகுதியானவர்கள். மேலும், மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை நிறைவேற்றி கடைசி மைல் கல்லைக் கடக்கும்போது, ​​நாட்டிலுள்ள பெண்களின் முகத்தில் மாற்றம் மற்றும் புதிய நம்பிக்கை தோன்றும். இது கற்பனை செய்ய முடியாத சக்தியாக வெளிப்படும். நாடு புதிய உயரத்தை எட்டியுள்ளது. இதை என்னால் உணர முடிகிறது” என்று கூறினார்.

இதனிடையே, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார் . அப்போது பேசிய அவர், “இன்று நான் கொண்டு வந்திருக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதாவின் மூலம், மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும். இது ஒரு முக்கிய படியாகும்” என்று கூறினார்.

இம்மசோதா ‘நாரி சக்தி வந்தான் ஆதினியம்’ என்று அழைக்கப்படுகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு சிறப்புக் கூட்டத் தொடர் மாற்றப்பட்ட பிறகு பேசிய பிரதமர் மோடி, “நாரி சக்தி வந்தான் ஆதினியம் என்பது ஒரு வரலாற்றுச் சட்டமாகும். இது பெண்களின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும். மேலும் நமது அரசியல் செயல்பாட்டில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பதற்கு வழிவகுக்கும்” என்று கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது 2010-ம் ஆண்டு மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. சிறப்புக் கூட்டத் தொடர் நாளை நிறைவடையும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்றோ அல்லது நாளையோ நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: PM Modipassespraises mpswomens quota bill
ShareTweetSendShare
Previous Post

திருமலையில் 36 மணி நேரம் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை!

Next Post

தங்கம் வெல்வோம்: ஹர்மன்பிரீத் சிங் நம்பிக்கை!

Related News

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies