மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்: பிரதமர் மோடி நன்றி!
Jun 14, 2026, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்: பிரதமர் மோடி நன்றி!

மாநிலங்களவையில் இன்று தாக்கல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 21, 2023, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு பெண்களின் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும் என்றார்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்ததற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

பின்னர், இதுகுறித்துப் பேசிய பிரதமர் மோடி, “இது இந்தியாவின் நாடாளுமன்றப் பயணத்தின் பொன்னான தருணம். இந்த சபையின் அனைத்து உறுப்பினர்களும், இந்த பொன்னான தருணத்திற்கு தகுதியானவர்கள். மேலும், மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை நிறைவேற்றி கடைசி மைல் கல்லைக் கடக்கும்போது, ​​நாட்டிலுள்ள பெண்களின் முகத்தில் மாற்றம் மற்றும் புதிய நம்பிக்கை தோன்றும். இது கற்பனை செய்ய முடியாத சக்தியாக வெளிப்படும். நாடு புதிய உயரத்தை எட்டியுள்ளது. இதை என்னால் உணர முடிகிறது” என்று கூறினார்.

இதனிடையே, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார் . அப்போது பேசிய அவர், “இன்று நான் கொண்டு வந்திருக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதாவின் மூலம், மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும். இது ஒரு முக்கிய படியாகும்” என்று கூறினார்.

இம்மசோதா ‘நாரி சக்தி வந்தான் ஆதினியம்’ என்று அழைக்கப்படுகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு சிறப்புக் கூட்டத் தொடர் மாற்றப்பட்ட பிறகு பேசிய பிரதமர் மோடி, “நாரி சக்தி வந்தான் ஆதினியம் என்பது ஒரு வரலாற்றுச் சட்டமாகும். இது பெண்களின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும். மேலும் நமது அரசியல் செயல்பாட்டில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பதற்கு வழிவகுக்கும்” என்று கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது 2010-ம் ஆண்டு மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. சிறப்புக் கூட்டத் தொடர் நாளை நிறைவடையும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்றோ அல்லது நாளையோ நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: PM Modipassespraises mpswomens quota bill
ShareTweetSendShare
Previous Post

திருமலையில் 36 மணி நேரம் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை!

Next Post

தங்கம் வெல்வோம்: ஹர்மன்பிரீத் சிங் நம்பிக்கை!

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies