மகளிர் இட ஒதுக்கீடு: மோடியின் தீர்க்கமான திருப்பம்: ஜெ.பி.நட்டா பாராட்டு!
Sep 8, 2025, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் இட ஒதுக்கீடு: மோடியின் தீர்க்கமான திருப்பம்: ஜெ.பி.நட்டா பாராட்டு!

அறிவியல், கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதாகவும் தகவல்!

Web Desk by Web Desk
Sep 21, 2023, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறிவியல், கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் இந்தியப் பெண்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரமளிக்க மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. அந்த வகையில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு பிரச்சனைக்கு பிரதமர் மோடி ஒரு தீர்க்கமான திருப்பத்தை கொடுத்திருக்கிறார் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

கடந்த 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றையதினம் மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகளிருக்கு 33% சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 19-ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடிய அவையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு தாக்கல் செய்தது. இம்மசோதா மீதான நேற்று நடைபெற்ற நிலையில், மக்களவையில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று காலை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெ.பி.நட்டா, “நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு பிரச்சனைக்கு, பிரதமர் நரேந்திர மோடி தீர்க்கமான திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், கடந்த 9 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் நான் மீண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அறிவியல், ராணுவம், கல்வி மற்றும் பொருளாதாரம் என எந்தத் துறையாக இருந்தாலும், இந்தியப் பெண்கள் முன்னணிப் பாத்திரத்தில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இது பெண்களின் இருப்பு மட்டுமல்ல, உலகில் அவர்கள் பெறும் மரியாதை. துறைகளில் அவர்களின் பங்களிப்பைப் பற்றி நமக்குச் சொல்கிறது.

ஆண்களை விட பெண்களின் உணர்திறன் அதிகமாக உள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது. இதன் விளைவாக, பெண்களின் முடிவெடுக்கும் திறன் சிறப்பாகவும், வேகமாகவும் இருக்கிறது. பொது நபர்களாக, ஆண்களை விட பெண்கள் அணுகக்கூடியவர்கள். மேலும், ஊழல் அளவுகூட பெண் பிரதிநிதி இருக்கும்போது குறைவாக இருக்கும். இது பெண்களின் நூற்றாண்டு. பெயர்களைப் பற்றி மக்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், “நாரி சக்தி வந்தன் ஆதினியம்” என்பது நமது அரசாங்கம், நமது பிரதமர் மற்றும் சமூகத்தில் உள்ள பெண்கள் பற்றிய நமது கண்ணோட்டத்தின் அடையாளம். இது ஒரு திசையை அளிக்கிறது” என்றார்.

Tags: ParliamentbjpSpeechJ.P.Naddanational president
ShareTweetSendShare
Previous Post

தங்கம் வெல்வோம்: ஹர்மன்பிரீத் சிங் நம்பிக்கை!

Next Post

செங்கோல் விநாயகர்!

Related News

டிரம்ப் அளித்த விருந்தில் தடுமாறிய ஜாம்பவான்கள் : வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பிரம்மோற்சவ விழா – வேலூரில் திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதம் புறப்பாடு ஊர்வலம்!

அதிரடியாக அறிவித்த டொயோட்டா : SUV கார்கள் விலை ரூ.3.49 லட்சம் வரை குறையுமாம் – சிறப்பு தொகுப்பு!

ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை – பழனி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

ராணுவ பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி : சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 32 காவல் நிலைய மரணங்கள் – மனித உரிமை அமைப்பு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயவாடாவில் 72 உயர பிரமாண்ட களிமண் விநாயகர் சிலை கரைப்பு!

பண்ருட்டி அருகே பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்திய சம்பவம் – இடப்பிரச்சனையால் நிகழ்ந்த கொடூரம்!

சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies