மகளிர் இட ஒதுக்கீடு: மோடியின் தீர்க்கமான திருப்பம்: ஜெ.பி.நட்டா பாராட்டு!
Mar 15, 2026, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் இட ஒதுக்கீடு: மோடியின் தீர்க்கமான திருப்பம்: ஜெ.பி.நட்டா பாராட்டு!

அறிவியல், கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதாகவும் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 21, 2023, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறிவியல், கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் இந்தியப் பெண்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரமளிக்க மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. அந்த வகையில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு பிரச்சனைக்கு பிரதமர் மோடி ஒரு தீர்க்கமான திருப்பத்தை கொடுத்திருக்கிறார் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

கடந்த 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றையதினம் மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகளிருக்கு 33% சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 19-ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடிய அவையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு தாக்கல் செய்தது. இம்மசோதா மீதான நேற்று நடைபெற்ற நிலையில், மக்களவையில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று காலை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெ.பி.நட்டா, “நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு பிரச்சனைக்கு, பிரதமர் நரேந்திர மோடி தீர்க்கமான திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், கடந்த 9 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் நான் மீண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அறிவியல், ராணுவம், கல்வி மற்றும் பொருளாதாரம் என எந்தத் துறையாக இருந்தாலும், இந்தியப் பெண்கள் முன்னணிப் பாத்திரத்தில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இது பெண்களின் இருப்பு மட்டுமல்ல, உலகில் அவர்கள் பெறும் மரியாதை. துறைகளில் அவர்களின் பங்களிப்பைப் பற்றி நமக்குச் சொல்கிறது.

ஆண்களை விட பெண்களின் உணர்திறன் அதிகமாக உள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது. இதன் விளைவாக, பெண்களின் முடிவெடுக்கும் திறன் சிறப்பாகவும், வேகமாகவும் இருக்கிறது. பொது நபர்களாக, ஆண்களை விட பெண்கள் அணுகக்கூடியவர்கள். மேலும், ஊழல் அளவுகூட பெண் பிரதிநிதி இருக்கும்போது குறைவாக இருக்கும். இது பெண்களின் நூற்றாண்டு. பெயர்களைப் பற்றி மக்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், “நாரி சக்தி வந்தன் ஆதினியம்” என்பது நமது அரசாங்கம், நமது பிரதமர் மற்றும் சமூகத்தில் உள்ள பெண்கள் பற்றிய நமது கண்ணோட்டத்தின் அடையாளம். இது ஒரு திசையை அளிக்கிறது” என்றார்.

Tags: ParliamentbjpSpeechJ.P.Naddanational president
ShareTweetSendShare
Previous Post

தங்கம் வெல்வோம்: ஹர்மன்பிரீத் சிங் நம்பிக்கை!

Next Post

செங்கோல் விநாயகர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies