மகளிர் இட ஒதுக்கீடு: மோடியின் தீர்க்கமான திருப்பம்: ஜெ.பி.நட்டா பாராட்டு!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் இட ஒதுக்கீடு: மோடியின் தீர்க்கமான திருப்பம்: ஜெ.பி.நட்டா பாராட்டு!

அறிவியல், கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதாகவும் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 21, 2023, 04:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அறிவியல், கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் இந்தியப் பெண்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரமளிக்க மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. அந்த வகையில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு பிரச்சனைக்கு பிரதமர் மோடி ஒரு தீர்க்கமான திருப்பத்தை கொடுத்திருக்கிறார் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

கடந்த 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றையதினம் மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகளிருக்கு 33% சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 19-ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடிய அவையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு தாக்கல் செய்தது. இம்மசோதா மீதான நேற்று நடைபெற்ற நிலையில், மக்களவையில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று காலை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெ.பி.நட்டா, “நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு பிரச்சனைக்கு, பிரதமர் நரேந்திர மோடி தீர்க்கமான திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், கடந்த 9 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் நான் மீண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அறிவியல், ராணுவம், கல்வி மற்றும் பொருளாதாரம் என எந்தத் துறையாக இருந்தாலும், இந்தியப் பெண்கள் முன்னணிப் பாத்திரத்தில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இது பெண்களின் இருப்பு மட்டுமல்ல, உலகில் அவர்கள் பெறும் மரியாதை. துறைகளில் அவர்களின் பங்களிப்பைப் பற்றி நமக்குச் சொல்கிறது.

ஆண்களை விட பெண்களின் உணர்திறன் அதிகமாக உள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது. இதன் விளைவாக, பெண்களின் முடிவெடுக்கும் திறன் சிறப்பாகவும், வேகமாகவும் இருக்கிறது. பொது நபர்களாக, ஆண்களை விட பெண்கள் அணுகக்கூடியவர்கள். மேலும், ஊழல் அளவுகூட பெண் பிரதிநிதி இருக்கும்போது குறைவாக இருக்கும். இது பெண்களின் நூற்றாண்டு. பெயர்களைப் பற்றி மக்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், “நாரி சக்தி வந்தன் ஆதினியம்” என்பது நமது அரசாங்கம், நமது பிரதமர் மற்றும் சமூகத்தில் உள்ள பெண்கள் பற்றிய நமது கண்ணோட்டத்தின் அடையாளம். இது ஒரு திசையை அளிக்கிறது” என்றார்.

Tags: ParliamentbjpSpeechJ.P.Naddanational president
Share
Tweet
SendShare
Previous Post

தங்கம் வெல்வோம்: ஹர்மன்பிரீத் சிங் நம்பிக்கை!

Next Post

செங்கோல் விநாயகர்!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies