மகளிர் இட ஒதுக்கீடு: மோடியின் தீர்க்கமான திருப்பம்: ஜெ.பி.நட்டா பாராட்டு!
Jul 31, 2026, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் இட ஒதுக்கீடு: மோடியின் தீர்க்கமான திருப்பம்: ஜெ.பி.நட்டா பாராட்டு!

அறிவியல், கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதாகவும் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 21, 2023, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறிவியல், கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் இந்தியப் பெண்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரமளிக்க மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. அந்த வகையில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு பிரச்சனைக்கு பிரதமர் மோடி ஒரு தீர்க்கமான திருப்பத்தை கொடுத்திருக்கிறார் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

கடந்த 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றையதினம் மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகளிருக்கு 33% சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 19-ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடிய அவையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு தாக்கல் செய்தது. இம்மசோதா மீதான நேற்று நடைபெற்ற நிலையில், மக்களவையில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று காலை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெ.பி.நட்டா, “நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு பிரச்சனைக்கு, பிரதமர் நரேந்திர மோடி தீர்க்கமான திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், கடந்த 9 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் நான் மீண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அறிவியல், ராணுவம், கல்வி மற்றும் பொருளாதாரம் என எந்தத் துறையாக இருந்தாலும், இந்தியப் பெண்கள் முன்னணிப் பாத்திரத்தில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இது பெண்களின் இருப்பு மட்டுமல்ல, உலகில் அவர்கள் பெறும் மரியாதை. துறைகளில் அவர்களின் பங்களிப்பைப் பற்றி நமக்குச் சொல்கிறது.

ஆண்களை விட பெண்களின் உணர்திறன் அதிகமாக உள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது. இதன் விளைவாக, பெண்களின் முடிவெடுக்கும் திறன் சிறப்பாகவும், வேகமாகவும் இருக்கிறது. பொது நபர்களாக, ஆண்களை விட பெண்கள் அணுகக்கூடியவர்கள். மேலும், ஊழல் அளவுகூட பெண் பிரதிநிதி இருக்கும்போது குறைவாக இருக்கும். இது பெண்களின் நூற்றாண்டு. பெயர்களைப் பற்றி மக்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், “நாரி சக்தி வந்தன் ஆதினியம்” என்பது நமது அரசாங்கம், நமது பிரதமர் மற்றும் சமூகத்தில் உள்ள பெண்கள் பற்றிய நமது கண்ணோட்டத்தின் அடையாளம். இது ஒரு திசையை அளிக்கிறது” என்றார்.

Tags: ParliamentbjpSpeechJ.P.Naddanational president
ShareTweetSendShare
Previous Post

தங்கம் வெல்வோம்: ஹர்மன்பிரீத் சிங் நம்பிக்கை!

Next Post

செங்கோல் விநாயகர்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies