முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆய்வுக்குழு இன்று முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் நலன் கருதியும், தேர்தல் செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையிலும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும், அதாவது அனைத்து சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செல்படுத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆய்வுக்குழு தலைவராக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளார்.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆய்வுக்குழு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், இன்று முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த குழுவில் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மொத்தம் 8 பேர் உள்ளனர்.
இந்த குழுவின் ஆய்வறிக்கை அடிப்படையில், ஒரே நாடு ஒரே தேர்தல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.