புது டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை மதச்சார்பற்ற ஜனதா தலைவர் ஹெச்.டி.குமாரசாமி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைவது குறித்துப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
Met Former Chief Minister of Karnataka and JD(S) leader Shri H.D. Kumaraswamy in the presence of our senior leader and Home Minister Shri @AmitShah Ji.
I am happy that JD(S) has decided to be the part of National Democratic Alliance. We wholeheartedly welcome them in the NDA.… pic.twitter.com/eRDUdCwLJc— Jagat Prakash Nadda (@JPNadda) September 22, 2023
இது தொடர்பாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் பதிவில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைய முடிவு செய்தது நல்ல விசயம். இந்த முடிவை நான் முழு மனதோடு வரவேற்கிறேன். இது தேசிய ஜனநாயகக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும். புதிய இந்தியாவை நோக்கிய பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில், கடந்த 2019 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் 7 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால், கர்நாடகாவில் பாஜக கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது. வழக்கத்தைவிடக் கூடுதல் தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளதால், அக்கட்சி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.