இந்தியாவின் கலாசாரத்தை உலகமே கொண்டாடுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்!
Mar 15, 2026, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் கலாசாரத்தை உலகமே கொண்டாடுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் ஜி20 தலைமை உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் பெருமிதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 24, 2023, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் கலாசாரத்தை உலகமே கொண்டாடி வருகிறது. மேலும், இந்தியாவின் ஜி20 தலைமையை உலமே அங்கீகரித்தது நமக்கு பெருமையான விஷயம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மனதின் குரல் (மன் கி பாத்) என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதுவரை 104 உரைகள் நிறைவடைந்த நிலையில் இன்று 105-வது உரை ஒலிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது, கோடிக்கணக்கான மக்கள் வெவ்வேறு ஊடகங்கள் மூலம் ஒரே நேரத்தில் கண்டுகளித்தனர். இஸ்ரோவின் யூடியூப் லைவ் சேனலில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். சந்திரயான்-3 மீது இந்தியர்களின் பற்று எவ்வளவு ஆழமானது என்பதை இது காட்டுகிறது.

மேலும், சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு ஜி20 மாநாடு ஒவ்வொரு இந்தியரின் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கி இருக்கிறது. பாரத மண்டபம் ஒரு பிரபலம் போல் மாறிவிட்டது. அம்மண்டபத்தின் முன்பு ஏராளான மக்கள் செல்பி எடுத்து பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர். இந்த உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனையும் நிரந்தர உறுப்பினராக்கியதன் மூலம் இந்தியா தனது தலைமையை நிரூபித்திருக்கிறது. மேலும், ஜி20 உச்சி மாநாட்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடமானது பல நூறு ஆண்டுகளுக்கு உலக வர்த்தகம் நடைபெறுவதற்கான அடிப்படையாக உருமாறும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாந்தி நிகேதன் மற்றும் கர்நாடகாவின் புனித ஒய்சாலா கோவில்கள் உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அற்புதமான சாதனைக்காக அனைத்து நாட்டு மக்களையும் நான் வாழ்த்துகிறேன். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கர்நாடகாவின் ஒய்சாலா கோவில்கள் 13-ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடக்கலைக்கு பெயர் பெற்றவை. இக்கோவில்கள் யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது, கோவில் கட்டுமானத்தின் இந்திய பாரம்பரியத்துக்குக் கிடைத்த மரியாதையாகும்.

நமது வரலாற்று மற்றும் கலாச்சார இடங்கள் முடிந்தவரை உலக பாரம்பரியத் தளங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் முயற்சி. நீங்கள் எங்காவது பயணம் செய்யத் திட்டமிடும் போதெல்லாம், இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காண முயற்சிக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் குழந்தைகளுக்காக தனித்துவமான நூலகத்தை இளைஞர்கள் ஆரம்பித்துள்ளனர். டிஜிட்டல் தொழில்நுட்ப காலகட்டத்திலும் புத்தகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளை வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பண்டிகை காலம் துவங்க உள்ள நேரத்தில் உள்ளூர் பொருட்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Tags: PM ModiSpeechmann ki baat
ShareTweetSendShare
Previous Post

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Next Post

இந்தியாவின் ஜி20 தலைமை வரலாற்றில் இடம்பெறும்: மொரீஷியஸ் அமைச்சர் புகழாரம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies