இந்தியாவின் கலாசாரத்தை உலகமே கொண்டாடுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்!
Jul 26, 2025, 07:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் கலாசாரத்தை உலகமே கொண்டாடுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் ஜி20 தலைமை உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் பெருமிதம்!

Web Desk by Web Desk
Sep 24, 2023, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் கலாசாரத்தை உலகமே கொண்டாடி வருகிறது. மேலும், இந்தியாவின் ஜி20 தலைமையை உலமே அங்கீகரித்தது நமக்கு பெருமையான விஷயம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மனதின் குரல் (மன் கி பாத்) என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதுவரை 104 உரைகள் நிறைவடைந்த நிலையில் இன்று 105-வது உரை ஒலிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது, கோடிக்கணக்கான மக்கள் வெவ்வேறு ஊடகங்கள் மூலம் ஒரே நேரத்தில் கண்டுகளித்தனர். இஸ்ரோவின் யூடியூப் லைவ் சேனலில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். சந்திரயான்-3 மீது இந்தியர்களின் பற்று எவ்வளவு ஆழமானது என்பதை இது காட்டுகிறது.

மேலும், சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு ஜி20 மாநாடு ஒவ்வொரு இந்தியரின் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கி இருக்கிறது. பாரத மண்டபம் ஒரு பிரபலம் போல் மாறிவிட்டது. அம்மண்டபத்தின் முன்பு ஏராளான மக்கள் செல்பி எடுத்து பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர். இந்த உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனையும் நிரந்தர உறுப்பினராக்கியதன் மூலம் இந்தியா தனது தலைமையை நிரூபித்திருக்கிறது. மேலும், ஜி20 உச்சி மாநாட்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடமானது பல நூறு ஆண்டுகளுக்கு உலக வர்த்தகம் நடைபெறுவதற்கான அடிப்படையாக உருமாறும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாந்தி நிகேதன் மற்றும் கர்நாடகாவின் புனித ஒய்சாலா கோவில்கள் உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அற்புதமான சாதனைக்காக அனைத்து நாட்டு மக்களையும் நான் வாழ்த்துகிறேன். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கர்நாடகாவின் ஒய்சாலா கோவில்கள் 13-ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடக்கலைக்கு பெயர் பெற்றவை. இக்கோவில்கள் யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது, கோவில் கட்டுமானத்தின் இந்திய பாரம்பரியத்துக்குக் கிடைத்த மரியாதையாகும்.

நமது வரலாற்று மற்றும் கலாச்சார இடங்கள் முடிந்தவரை உலக பாரம்பரியத் தளங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் முயற்சி. நீங்கள் எங்காவது பயணம் செய்யத் திட்டமிடும் போதெல்லாம், இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காண முயற்சிக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் குழந்தைகளுக்காக தனித்துவமான நூலகத்தை இளைஞர்கள் ஆரம்பித்துள்ளனர். டிஜிட்டல் தொழில்நுட்ப காலகட்டத்திலும் புத்தகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளை வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பண்டிகை காலம் துவங்க உள்ள நேரத்தில் உள்ளூர் பொருட்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Tags: PM ModiSpeechmann ki baat
ShareTweetSendShare
Previous Post

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Next Post

இந்தியாவின் ஜி20 தலைமை வரலாற்றில் இடம்பெறும்: மொரீஷியஸ் அமைச்சர் புகழாரம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies