கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாள் !
Oct 26, 2025, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாள் !

தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்ற நாள்!

Web Desk by Web Desk
Sep 24, 2023, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2007, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய வரலாறு நிகழ்ந்த ஆண்டு தான் அது. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. அந்த உலகக்கோப்பை தோல்விக்கான அழுத்தத்தில் இருந்தே வெளி வர முடியாமல் இந்திய முன்னாள் வீரர்கள் தவித்து கொண்டிருந்தனர்.

அதற்கு பின் உடனடியாக தென்னாப்பிரிக்காவுக்கு டி20 உலகக்கோப்பை விளையாட இந்திய அணி புறப்பட வேண்டிய நிலை உருவாகியது. இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறோம் என்ற பெயரில் டிராவிட், சச்சின், கங்குலி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விலகிக் கொண்டனர். இதனால் யாரை கேப்டனாக நியமிப்பது என்று புரியாமல் தோனியை கேப்டனாக அறிவித்தது திலீப் வெங்சர்கார் தலைமையிலானத் தேர்வு குழு.

பின்னர் யூசுப் பதான், ரோகித் சர்மா, ஜோகிந்தர் சர்மா என்று சில புதிய வீரர்களுடனும், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், உத்தப்பா, ஆர்பி சிங், ஸ்ரீசாந்த் என்று சில அனுபவ வீரர்களுடனும் தென்னாப்பிரிக்கா சென்றது தோனி தலைமையிலான இந்தியா அணி. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடிக்க, இரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்தேப் போனார்கள் என்று கூறலாம்.

தென்னாப்பிரிக்காவில் இருந்தபடியே யுவராஜ் சிங் தனதுப் பேட்டின் மூலமாக ஒரு புயலையே உருவாக்கினார். ஒரு வழியாக அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியப் போது, இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியாவால் வெற்றிபெற முடியாது என்று பிரபல இதழில் எழுதினார். ஆனால் யுவராஜ் சிங்கின் அதிரடி, ஸ்ரீசாந்த் ஸ்விங், ஆர்பி சிங்கின் யார்க்கர், ஹர்பஜன் சிங்கின் சுழல் என்று இந்திய அணி அடித்த அடி, ரவி சாஸ்திரியின் வீட்டில் எதிரொலித்தது.

இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மாவிடம் கொடுத்து வெற்றியை உறுதி செய்தார் தோனி. கவுதம் கம்பீர், ரோகித் சர்மா, இர்பான் பதான், ஆர்பி சிங் ஆகியோர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அன்றையப் போட்டியில் வெற்றிபெற்ற பின் தோனி நேரடியாக சென்று, “We Proved You Wrong” என்று பதில் அளித்தார்.

சின்ன பசங்களால் என்ன செய்திட முடியும் என்று இந்திய இரசிகர்கள், முன்னாள் வீரர்கள், எதிரணிகள் என அனைவரும் யோசித்த நிலையில் கோப்பை வென்று கொடுத்தார் தோனி.

Tags: Cricketms dhoni crickett 20
ShareTweetSendShare
Previous Post

கோப்பையை வெல்வது பந்துவீச்சாளர்கள் கையில்தான் உள்ளது!

Next Post

காலிறுதிக்கு சென்ற இந்திய வாலிபால் அணி !

Related News

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies