கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாள் !
Jan 14, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாள் !

தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்ற நாள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 24, 2023, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2007, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய வரலாறு நிகழ்ந்த ஆண்டு தான் அது. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. அந்த உலகக்கோப்பை தோல்விக்கான அழுத்தத்தில் இருந்தே வெளி வர முடியாமல் இந்திய முன்னாள் வீரர்கள் தவித்து கொண்டிருந்தனர்.

அதற்கு பின் உடனடியாக தென்னாப்பிரிக்காவுக்கு டி20 உலகக்கோப்பை விளையாட இந்திய அணி புறப்பட வேண்டிய நிலை உருவாகியது. இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறோம் என்ற பெயரில் டிராவிட், சச்சின், கங்குலி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விலகிக் கொண்டனர். இதனால் யாரை கேப்டனாக நியமிப்பது என்று புரியாமல் தோனியை கேப்டனாக அறிவித்தது திலீப் வெங்சர்கார் தலைமையிலானத் தேர்வு குழு.

பின்னர் யூசுப் பதான், ரோகித் சர்மா, ஜோகிந்தர் சர்மா என்று சில புதிய வீரர்களுடனும், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், உத்தப்பா, ஆர்பி சிங், ஸ்ரீசாந்த் என்று சில அனுபவ வீரர்களுடனும் தென்னாப்பிரிக்கா சென்றது தோனி தலைமையிலான இந்தியா அணி. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடிக்க, இரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்தேப் போனார்கள் என்று கூறலாம்.

தென்னாப்பிரிக்காவில் இருந்தபடியே யுவராஜ் சிங் தனதுப் பேட்டின் மூலமாக ஒரு புயலையே உருவாக்கினார். ஒரு வழியாக அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியப் போது, இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியாவால் வெற்றிபெற முடியாது என்று பிரபல இதழில் எழுதினார். ஆனால் யுவராஜ் சிங்கின் அதிரடி, ஸ்ரீசாந்த் ஸ்விங், ஆர்பி சிங்கின் யார்க்கர், ஹர்பஜன் சிங்கின் சுழல் என்று இந்திய அணி அடித்த அடி, ரவி சாஸ்திரியின் வீட்டில் எதிரொலித்தது.

இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மாவிடம் கொடுத்து வெற்றியை உறுதி செய்தார் தோனி. கவுதம் கம்பீர், ரோகித் சர்மா, இர்பான் பதான், ஆர்பி சிங் ஆகியோர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அன்றையப் போட்டியில் வெற்றிபெற்ற பின் தோனி நேரடியாக சென்று, “We Proved You Wrong” என்று பதில் அளித்தார்.

சின்ன பசங்களால் என்ன செய்திட முடியும் என்று இந்திய இரசிகர்கள், முன்னாள் வீரர்கள், எதிரணிகள் என அனைவரும் யோசித்த நிலையில் கோப்பை வென்று கொடுத்தார் தோனி.

Tags: Cricketms dhoni crickett 20
ShareTweetSendShare
Previous Post

கோப்பையை வெல்வது பந்துவீச்சாளர்கள் கையில்தான் உள்ளது!

Next Post

காலிறுதிக்கு சென்ற இந்திய வாலிபால் அணி !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies