"அமிர்த பாரத நிலையங்கள்": பிரதமர் மோடி!
Sep 30, 2025, 03:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“அமிர்த பாரத நிலையங்கள்”: பிரதமர் மோடி!

மேம்படுத்தப்பட்ட இரயில் நிலையங்களுக்கு புதிய பெயர்!

Web Desk by Web Desk
Sep 24, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் 500-க்கும் மேற்பட்ட முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அமிர்த காலத்தின்போது கட்டப்படும் இந்த புதிய நிலையங்கள் “அமிர்த பாரத நிலையங்கள்” என்று அழைக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

சென்னை-நெல்லை வந்தே பாரத் இரயில் சேவை உட்பட நாட்டில் மொத்தம் 9 வந்தே பாரத் இரயில் சேவைகளை டெல்லியில் இருந்தபடியே காணொளிக் காட்சி வாயிலாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “கடந்த பல வருடங்களாகவே ரயில் நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஆகவே, மேற்கண்ட இரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த இரயில் நிலையங்கள் அமிர்த காலத்தில் கட்டுப்படுவதால், ‘அமிர்த பாரத நிலையங்கள்’ என்று அழைக்கப்படும்கி. மேலும், இந்த நிலையங்கள் வரும் காலத்தில் புதிய பாரதத்தின் அடையாளமாக மாறும்.

வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியா, தற்போது அதன் இரயில் நிலையங்களையும் நவீனமயமாக்கி வருகிறது. இந்த ரயில் நிலையங்களில் முதல் முறையாக லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படுகின்றன. இந்த டன் உள்கட்டமைப்பு வசதி 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும். அதேபோல, இன்று தொடங்கப்படும் 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்கள் இந்தியா முழுவதும் கணிசமான இணைப்பை மேம்படுத்துவதோடு, சுற்றுலாவையும் மேம்படுத்தும்.

இதுவரை 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிஸா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் மக்களும் இந்த சேவையைப் பெறுவார்கள். வந்தே பாரத் இரயில்களின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 1,11,00,000 கோடி பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். சாமானிய குடிமக்களின் வாழ்க்கையில் ரயில்வே முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் நிலையில், கடந்த காலங்களில் இத்துறை புறக்கணிக்கப்பட்டது.

இரயில்வேக்கான இந்தாண்டு பட்ஜெட் 2014-ன் இரயில் பட்ஜெட்டை விட 8 மடங்கு அதிகம். இதேபோல், இரயில் பாதை இரட்டிப்பு, மின்மயமாக்கல் மற்றும் புதிய வழித்தடங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. ரயில் நிலையத்தை நிறுவிய ‘ஸ்தாப்னா திவாஸ்’ தினத்தை இரயில்வே கொண்டாடத் தொடங்கி இருக்கிறது. தற்போது ரயில் நிலையங்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த பாரம்பரியம் மேலும் விரிவுபடுத்தப்படும். மேலும் அதிகமான மக்கள் இதில் ஈடுபடுவார்கள்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாநில மக்களும் வளர்ச்சி பெறுவது அவசியம். இரயில்வேயின் ஒவ்வொரு பணியாளரும் பயணத்தை எளிதாக்குவதற்கும் பயணிகளுக்கு நல்ல அனுபவத்தை வழங்குவதற்கும் தொடர்ந்து உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிக்கு உத்தேச ஸ்வச்தா அபியானில் அனைவரும் ஈடுபட வேண்டும்” என்றார்.

Tags: PM ModiAmrit Bharat Stationvande bharath express
ShareTweetSendShare
Previous Post

நீதி வழங்குவதில் தாமதம்: அமித்ஷா கவலை!

Next Post

நிலவில் தேசிய சின்னம் பதிவாகாதது ஏன்? இஸ்ரோ தலைவர் விளக்கம்!

Related News

பாகிஸ்தானின் பி டீம் காங்கிரஸ் – பிரதீப் பண்டாரி

ப.சிதம்பரத்திற்கு பதிலடி கொடுத்த பாஜக!

கனடாவில் ஆறு மணி நேரம் போராடி திமிங்கலத்தை மீட்ட குழுவினர்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

அரியலூர் : பொதுப் பாதை ஆக்கிரமிப்பை எதிர்த்து போராட்டம்!

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோஷின் நக்வி விலகியிருக்க வேண்டும் – இந்தியா

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ஜிஎஸ்டி சீா்திருத்தம் – விலை மாற்றம் செய்யாதது குறித்து 3,000 புகாா்கள்!

தூத்துக்குடி : பயிர் காப்பீட்டு தொகையை விடுவிக்க கோரி போராடிய விவசாயிகள் கைது!

ஆசிய கோப்பை வெற்றி- சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி!

வேலூர் : மின் கம்பம் உடைந்து முதியவர் பலி – உறவினர்கள் போராட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலம்!

இந்தியா – பூடான் இடையே நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் ரயில் பாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies