"அமிர்த பாரத நிலையங்கள்": பிரதமர் மோடி!
Apr 29, 2026, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“அமிர்த பாரத நிலையங்கள்”: பிரதமர் மோடி!

மேம்படுத்தப்பட்ட இரயில் நிலையங்களுக்கு புதிய பெயர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 24, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் 500-க்கும் மேற்பட்ட முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அமிர்த காலத்தின்போது கட்டப்படும் இந்த புதிய நிலையங்கள் “அமிர்த பாரத நிலையங்கள்” என்று அழைக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

சென்னை-நெல்லை வந்தே பாரத் இரயில் சேவை உட்பட நாட்டில் மொத்தம் 9 வந்தே பாரத் இரயில் சேவைகளை டெல்லியில் இருந்தபடியே காணொளிக் காட்சி வாயிலாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “கடந்த பல வருடங்களாகவே ரயில் நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஆகவே, மேற்கண்ட இரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த இரயில் நிலையங்கள் அமிர்த காலத்தில் கட்டுப்படுவதால், ‘அமிர்த பாரத நிலையங்கள்’ என்று அழைக்கப்படும்கி. மேலும், இந்த நிலையங்கள் வரும் காலத்தில் புதிய பாரதத்தின் அடையாளமாக மாறும்.

வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியா, தற்போது அதன் இரயில் நிலையங்களையும் நவீனமயமாக்கி வருகிறது. இந்த ரயில் நிலையங்களில் முதல் முறையாக லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படுகின்றன. இந்த டன் உள்கட்டமைப்பு வசதி 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும். அதேபோல, இன்று தொடங்கப்படும் 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்கள் இந்தியா முழுவதும் கணிசமான இணைப்பை மேம்படுத்துவதோடு, சுற்றுலாவையும் மேம்படுத்தும்.

இதுவரை 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிஸா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் மக்களும் இந்த சேவையைப் பெறுவார்கள். வந்தே பாரத் இரயில்களின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 1,11,00,000 கோடி பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். சாமானிய குடிமக்களின் வாழ்க்கையில் ரயில்வே முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் நிலையில், கடந்த காலங்களில் இத்துறை புறக்கணிக்கப்பட்டது.

இரயில்வேக்கான இந்தாண்டு பட்ஜெட் 2014-ன் இரயில் பட்ஜெட்டை விட 8 மடங்கு அதிகம். இதேபோல், இரயில் பாதை இரட்டிப்பு, மின்மயமாக்கல் மற்றும் புதிய வழித்தடங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. ரயில் நிலையத்தை நிறுவிய ‘ஸ்தாப்னா திவாஸ்’ தினத்தை இரயில்வே கொண்டாடத் தொடங்கி இருக்கிறது. தற்போது ரயில் நிலையங்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த பாரம்பரியம் மேலும் விரிவுபடுத்தப்படும். மேலும் அதிகமான மக்கள் இதில் ஈடுபடுவார்கள்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாநில மக்களும் வளர்ச்சி பெறுவது அவசியம். இரயில்வேயின் ஒவ்வொரு பணியாளரும் பயணத்தை எளிதாக்குவதற்கும் பயணிகளுக்கு நல்ல அனுபவத்தை வழங்குவதற்கும் தொடர்ந்து உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிக்கு உத்தேச ஸ்வச்தா அபியானில் அனைவரும் ஈடுபட வேண்டும்” என்றார்.

Tags: PM ModiAmrit Bharat Stationvande bharath express
ShareTweetSendShare
Previous Post

நீதி வழங்குவதில் தாமதம்: அமித்ஷா கவலை!

Next Post

நிலவில் தேசிய சின்னம் பதிவாகாதது ஏன்? இஸ்ரோ தலைவர் விளக்கம்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies