நிலவில் தேசிய சின்னம் பதிவாகாதது ஏன்? இஸ்ரோ தலைவர் விளக்கம்!
Sep 12, 2026, 09:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவில் தேசிய சின்னம் பதிவாகாதது ஏன்? இஸ்ரோ தலைவர் விளக்கம்!

இஸ்ரோ லோகோவும் பதிவாகாததற்கு மண்ணின் தன்மையை காரணம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 24, 2023, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்த இந்தியாவின் தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோ ஆகியவை பதிவாகாமல் போனதற்கு மண்ணின் தன்மையே காரணம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ. இந்த விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை திட்டமிட்டபடி சரியாக 6.04 மணிக்கு தரையிறக்கப்பட்டது. இதன் பிறகு, தரையிறங்கிய இடத்தில் இருந்தே லேண்டரும், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ரோவரும் ஆய்வு செய்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் இருள் சூழ்ந்ததால் சிவசக்தி புள்ளியில் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவை 14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதீத குளிர் நிலவும் என்பதால், மீண்டும் பகல் தொடங்கிய, கடந்த 22-ம் தேதி விக்ரம் லேண்டரையும், ரோவரையும் மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்த நிலையில், லேண்டர் மற்றும் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. எனினும், சிக்னலை பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், “லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த தொடர்பும் கிடைக்கவில்லை. அதேசமயம், அது வராது என்றும் என்னால் கூற முடியாது. நாம் காத்திருக்க வேண்டும். பகல் நேரத்தில் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும். அதாவது வெப்பநிலை மட்டுமே உயரும். அதேபோல, நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோ பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த முத்திரைகள் நிலவின் மேற்பரப்பில் பதியவில்லை.

இதற்கு மண்ணின் தன்மையே காரணம். நிலவில் மண் தூசியாக இல்லாமல் திடமாக இருந்திருக்க வேண்டும். மேலும், தென்துருவப் பகுதியிலுள்ள மண்ணைப் பற்றிய புதிய தகவல்கள் என்பது எதிர்கால பயணங்களுக்கு இலக்காக உள்ளது. அதேபோல, நிலவில் தண்ணீரை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. இது தொடர்பாக தீவிர ஆய்வு செய்யப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: ISROChandrayan 3vikram landerRoverNew information
Share
Tweet
SendShare
Previous Post

“அமிர்த பாரத நிலையங்கள்”: பிரதமர் மோடி!

Next Post

‘ஐ2யு2’ இணையதளம் தொடக்கம்

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies