நிலவில் தேசிய சின்னம் பதிவாகாதது ஏன்? இஸ்ரோ தலைவர் விளக்கம்!
Jul 29, 2026, 06:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவில் தேசிய சின்னம் பதிவாகாதது ஏன்? இஸ்ரோ தலைவர் விளக்கம்!

இஸ்ரோ லோகோவும் பதிவாகாததற்கு மண்ணின் தன்மையை காரணம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 24, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்த இந்தியாவின் தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோ ஆகியவை பதிவாகாமல் போனதற்கு மண்ணின் தன்மையே காரணம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ. இந்த விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை திட்டமிட்டபடி சரியாக 6.04 மணிக்கு தரையிறக்கப்பட்டது. இதன் பிறகு, தரையிறங்கிய இடத்தில் இருந்தே லேண்டரும், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ரோவரும் ஆய்வு செய்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் இருள் சூழ்ந்ததால் சிவசக்தி புள்ளியில் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவை 14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதீத குளிர் நிலவும் என்பதால், மீண்டும் பகல் தொடங்கிய, கடந்த 22-ம் தேதி விக்ரம் லேண்டரையும், ரோவரையும் மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்த நிலையில், லேண்டர் மற்றும் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. எனினும், சிக்னலை பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், “லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த தொடர்பும் கிடைக்கவில்லை. அதேசமயம், அது வராது என்றும் என்னால் கூற முடியாது. நாம் காத்திருக்க வேண்டும். பகல் நேரத்தில் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும். அதாவது வெப்பநிலை மட்டுமே உயரும். அதேபோல, நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோ பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த முத்திரைகள் நிலவின் மேற்பரப்பில் பதியவில்லை.

இதற்கு மண்ணின் தன்மையே காரணம். நிலவில் மண் தூசியாக இல்லாமல் திடமாக இருந்திருக்க வேண்டும். மேலும், தென்துருவப் பகுதியிலுள்ள மண்ணைப் பற்றிய புதிய தகவல்கள் என்பது எதிர்கால பயணங்களுக்கு இலக்காக உள்ளது. அதேபோல, நிலவில் தண்ணீரை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. இது தொடர்பாக தீவிர ஆய்வு செய்யப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: ISROChandrayan 3vikram landerRoverNew information
ShareTweetSendShare
Previous Post

“அமிர்த பாரத நிலையங்கள்”: பிரதமர் மோடி!

Next Post

‘ஐ2யு2’ இணையதளம் தொடக்கம்

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies