மாபெரும் தூய்மைப்பணி: மத்திய அரசு அழைப்பு
Aug 15, 2025, 06:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாபெரும் தூய்மைப்பணி: மத்திய அரசு அழைப்பு

Web Desk by Web Desk
Sep 25, 2023, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அக்டோபர் 1-ந் தேதி நாடு முழுவதும் நடைபெறும் மெகா தூய்மைப் பணியில் பொதுமக்கள் பங்கேற்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடு முழுவதும் அக்டோபர் 1-ந் தேதி பொது இடங்களில் தூய்மைப்பணிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.

மகாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டி, ‘சுகாதார சேவை’ என்ற பெயரில், நாடு முழுவதும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் பிரமாண்ட தூய்மைப்பணி நடந்து வருகிறது. இது அக்டோபர் 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது.


அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 1-ந் தேதி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் பொது இடங்களில் மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த மெகா தூய்மைப்பணியில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒரு மணி நேரம் பங்கேற்குமாறு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தனித்துவமான அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, நாடு முழுவதும் அக்டோபர் 1-ந் தேதி காலை 10 மணிக்கு மெகா தூய்மைப் பணி நடைபெறும்.

நாடு முழுவதும் உள்ள சந்தை பகுதிகள், இரயில் நிலையங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப்பணி நடைபெறும். இதில், நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு பேரூராட்சி, ஊராட்சிகள், சிவில் விமான போக்குவரத்து, இரயில்வே, தகவல் தொழில்நுட்பம் போன்ற மத்திய அரசுத் துறைகள், பொது நிறுவனங்கள் ஆகியவை தூய்மைப்பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கங்கள் ஆகியவை இவற்றை நடத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் இணையதளங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: PM Modigovernment of indiaswatch bharath
ShareTweetSendShare
Previous Post

10 புலிகள் உயிரிழப்பு: தேசிய புலிகள் ஆணையம் இன்று விசாரணை!

Next Post

3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Related News

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies