காங்கிரஸ் கட்சியை நடத்துவது நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு!
Jan 14, 2026, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் கட்சியை நடத்துவது நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு!

ஏழைகளின் வாழ்க்கை சாகச சுற்றுலாவாக மாறிவிட்டதாக குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 25, 2023, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியை தற்போது நகர்ப்புற நக்சல்கள்தான் நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லை. ஏழைகளின் வீடுகளும், காலனிகளும் ஷூட்டிங் ஸ்பாட்களாக மாறிவிட்டன என்று கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆகவே, ஆளும் பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், எதிர்கட்சியான காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் தீவிர முயற்சியில் இறங்கி இருக்கின்றன. அந்த வகையில், பா.ஜ.க. மக்களை சந்திக்கும் வகையிலான 5 யாத்திரைகளை நடத்தி வருகிறது. இதன் உச்சகட்டமாக பா.ஜ.க. தொண்டர்களை ஒன்று திரட்டும் “கார்யகர்த்தா மகாகும்பம்” என்கிற நிகழ்ச்சியை போபாலின் நடத்தியது. இக்கூட்டத்தில் லட்சக்கணக்கான பா.ஜ.க. தொண்டர்கள் கலந்துகொண்டர்கள்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லை. கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்த அவர்களுக்கு ஏழைகளின் வாழ்க்கை ஒரு சாகச சுற்றுலாதான். அவர்களுக்கு ஏழை மக்களின் வீடுகளும், காலனிகளும் வீடியோ படப்பிடிப்புக்கான இடங்களாக மாறிவிட்டன. இதைத்தான் கடந்த காலத்திலும் செய்திருக்கிறார்கள். பா.ஜ.க. அரசு நாட்டின் வளர்ச்சி மற்றும் மகத்தான முகத்தை உலகுக்கு எடுத்துரைக்கிறது. எனது இயல்பு, கடின உழைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வை என்பது வேறு. என்னைப் பொறுத்தவரை நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மேல் எதுவும் இல்லை. நான் சிரமங்களை எதிர்கொண்டாலும், நாட்டு மக்களை எதையும் இழக்க விடமாட்டேன்.

வளர்ந்த இந்தியாவிற்கு, வளர்ந்த மத்தியப் பிரதேசம் மிகவும் முக்கியமானது. அதற்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.தான் ஆட்சிக்கு வர வேண்டும். எனவே, ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டர்களின் பொறுப்பும் தங்களது 100 சதவீத பங்களிப்பை வழங்க வேண்டும். இந்த ‘கார்யகர்த்தா மகாகும்பம்’ பா.ஜ.க. தொண்டர்களின் ஆற்றலைக் காட்டுகிறது. ‘கார்யகர்த்தா மஹாகும்பம்’ நிறைய விஷயங்களைச் சொல்கிறது. இங்குள்ள மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பா.ஜ.க.தான் ஆட்சி செய்து வருகிறது. அந்த வகையில், மாநிலத்தை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.

அதேசமயம், ஊழல் நிறைந்த ஒரு குடும்பக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால், அது மாநிலத்திற்கு பெரிய இழப்பாகும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநில வளர்ச்சி பாதிக்கும். மீண்டும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மகளிர் இட ஒதுக்கீட்டை கைவிடுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அவர்கள் சுமார் 30 ஆண்டுகளாக மகளிர் இடஒதுக்கீட்டை கிடப்பில் வைத்திருந்தனர். பெண்களுக்கு பா.ஜ.க. அங்கீகாரம் அளித்து, விமர்சனங்களை பொய்யாக்கி இருக்கிறது. அதேபோல, எதிர்கட்சிகள் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை எதிர்த்தனர். ஆனால், உலகமே யு.பி.ஐ.யை பாராட்டி வருகிறது. அது மட்டுமா, பழங்குடியினர் ஒருவர் குடியரசுத் தலைவராவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது, தரமான சாலைகள் அமைப்பது, இரயில் நிலையங்கள் அமைப்பதிலும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியால் இந்தியாவில் நடக்கும் வளர்ச்சிப் பணிகளை ஜீரணிக்க முடியவில்லை. நாடு வளர்ச்சியடைவதை அவர்கள் விரும்பவில்லை. நாட்டின் சாதனைகளைப் பற்றி அவர்கள் ஒருபோதும் பெருமிதம் கொள்வதில்லை. ஏனென்றால், அவர்கள் நாடு மாற்றமடைவதையோ, வளர்ச்சியடையவோ விரும்பவில்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால், நாட்டின் வளர்ச்சிக்காக பா.ஜ.க. உழைத்துக்கொண்டிருந்தால், காங்கிரஸ் ஓட்டுக்காக உழைக்கிறது. மத்திய பிரதேசத்தில் இரட்டை இன்ஜின் அரசு அமைந்ததால் மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு பிறகு இந்தியாவில் சுமார் 13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டிருக்கிறார்கள்” என்றார்.

Tags: PM ModiSpeechbhopal
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவிற்கு மேலும் இரண்டு பதங்கங்கள் !

Next Post

அரசு ஊழியர்களின் பணி சமூகத்தில் விளிம்புநிலை மக்களை உயர்த்துவதே !-குடியரசு தலைவர்.

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies