ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப்போட்டி: பிரதமர் மோடி பங்கேற்பு!
Oct 25, 2025, 05:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப்போட்டி: பிரதமர் மோடி பங்கேற்பு!

101 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3,000 மாணவர்கள் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Sep 26, 2023, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசியத் தலைநகர் டெல்லியில் பிரகதி மைதானத்தில் அமைந்திருக்கும் பாரத் மண்டபத்தில், இன்று நடைபெறும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இந்தாண்டு ஜி20 உச்சி மாநாட்டின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜி20 தலைமைத்துவம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள 75 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக சிறப்பு கருத்தரங்கம் நடத்துவதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்தது.

அதன்படி, வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு (ஆர்.ஐ.எஸ்.) சார்பில், நாடு முழுவதும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி தேசியத் தலைநகர் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “ஜி20 ஜன் பகிதாரி இயக்கத்தில் நாடு முழுவதும் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த 5 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று சாதனை படைத்தார்கள்.

அந்த வகையில், ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முயற்சியின் கீழ் நாடு முழுவதும் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில் பல்கலைக்கழகங்களுக்காகத் தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகளையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சுமார் 3,000 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொள்வார்கள். இது தவிர, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் நேரலை வாயிலாகக் கலந்துகொள்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முயற்சியானது, இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதலில் இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில், 75 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் வகையில்  திட்டமிடப்பட்டது. ஆனால், இறுதியில் இந்தியா முழுவதும் 101 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

Tags: PM ModiaddressG20 universityconnect finaleprogramme
ShareTweetSendShare
Previous Post

குமரியில் தொடர் மழை: அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

Next Post

பசுமை ஹைட்ரஜனுக்கான மையமாக இந்தியா உருவெடுக்கும்!- மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies