ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப்போட்டி: பிரதமர் மோடி பங்கேற்பு!
Mar 15, 2026, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப்போட்டி: பிரதமர் மோடி பங்கேற்பு!

101 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3,000 மாணவர்கள் பங்கேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 26, 2023, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசியத் தலைநகர் டெல்லியில் பிரகதி மைதானத்தில் அமைந்திருக்கும் பாரத் மண்டபத்தில், இன்று நடைபெறும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இந்தாண்டு ஜி20 உச்சி மாநாட்டின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜி20 தலைமைத்துவம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள 75 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக சிறப்பு கருத்தரங்கம் நடத்துவதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்தது.

அதன்படி, வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு (ஆர்.ஐ.எஸ்.) சார்பில், நாடு முழுவதும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி தேசியத் தலைநகர் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “ஜி20 ஜன் பகிதாரி இயக்கத்தில் நாடு முழுவதும் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த 5 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று சாதனை படைத்தார்கள்.

அந்த வகையில், ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முயற்சியின் கீழ் நாடு முழுவதும் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில் பல்கலைக்கழகங்களுக்காகத் தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகளையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சுமார் 3,000 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொள்வார்கள். இது தவிர, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் நேரலை வாயிலாகக் கலந்துகொள்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முயற்சியானது, இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதலில் இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில், 75 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் வகையில்  திட்டமிடப்பட்டது. ஆனால், இறுதியில் இந்தியா முழுவதும் 101 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

Tags: PM ModiaddressG20 universityconnect finaleprogramme
ShareTweetSendShare
Previous Post

குமரியில் தொடர் மழை: அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

Next Post

பசுமை ஹைட்ரஜனுக்கான மையமாக இந்தியா உருவெடுக்கும்!- மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies