ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப்போட்டி: பிரதமர் மோடி பங்கேற்பு!
Jul 29, 2026, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப்போட்டி: பிரதமர் மோடி பங்கேற்பு!

101 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3,000 மாணவர்கள் பங்கேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 26, 2023, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசியத் தலைநகர் டெல்லியில் பிரகதி மைதானத்தில் அமைந்திருக்கும் பாரத் மண்டபத்தில், இன்று நடைபெறும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இந்தாண்டு ஜி20 உச்சி மாநாட்டின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜி20 தலைமைத்துவம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள 75 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக சிறப்பு கருத்தரங்கம் நடத்துவதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்தது.

அதன்படி, வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு (ஆர்.ஐ.எஸ்.) சார்பில், நாடு முழுவதும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி தேசியத் தலைநகர் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “ஜி20 ஜன் பகிதாரி இயக்கத்தில் நாடு முழுவதும் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த 5 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று சாதனை படைத்தார்கள்.

அந்த வகையில், ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முயற்சியின் கீழ் நாடு முழுவதும் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில் பல்கலைக்கழகங்களுக்காகத் தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகளையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சுமார் 3,000 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொள்வார்கள். இது தவிர, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் நேரலை வாயிலாகக் கலந்துகொள்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முயற்சியானது, இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதலில் இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில், 75 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் வகையில்  திட்டமிடப்பட்டது. ஆனால், இறுதியில் இந்தியா முழுவதும் 101 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

Tags: PM ModiaddressG20 universityconnect finaleprogramme
ShareTweetSendShare
Previous Post

குமரியில் தொடர் மழை: அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

Next Post

பசுமை ஹைட்ரஜனுக்கான மையமாக இந்தியா உருவெடுக்கும்!- மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies