சீனா கப்பல் வருகைக்கு அனுமதி வழங்கவில்லை: இலங்கை மறுப்பு!
Mar 15, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனா கப்பல் வருகைக்கு அனுமதி வழங்கவில்லை: இலங்கை மறுப்பு!

இந்தியாவின் பாதுகாப்பு முக்கியம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 26, 2023, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன கப்பல் வருகைக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தைதான் நடந்து வருகிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனா 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவை உளவு பார்க்க சீனா திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் “யுவான் வாங் 5” என்கிற உளவுக்கப்பலை சீனா அனுப்பியது. இக்கப்பல், இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தில் ஒரு வாரம் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது, தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருக்கும் இந்திய பாதுகாப்பு சார்ந்த நிறுவனங்களை உளவு பார்த்தது.

இதையடுத்து, இலங்கைக்கு தனது கண்டனத்தை பதிவு செய்த இந்தியா, நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக இலங்கையிடம் தனது கவலையையும் தெரிவித்தது. மேலும், இனி இவ்வாறு நடக்காதவாறு பார்த்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தியது. இந்த சூழலில், “ஷியான் 6” என்கிற மற்றொரு உளவுக்கப்பலை, இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தில் நிலைநிறுத்துவதற்கு சீனா முயற்சித்து வருகிறது. இதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், இக்கப்பல் இந்தாண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி இலங்கைக்கு வரவிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, இலங்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் இந்தியா, தனது கவலையையும் வெளிப்படுத்தி இருந்தது. மேலும், இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இம்மாத தொடக்கத்தில் இலங்கைக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில்தான், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, “வெளிநாட்டுக் கப்பல்கள், விமானங்கள் இலங்கைக்கு வருவது குறித்து நிலையான இயக்க முறை (எஸ்.ஓ.பி.) ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இதுகுறித்து இந்தியா உள்ளிட்ட நேசநாடுகளுடன் கலந்தாலோசித்தும் இருக்கிறோம். இந்த பேச்சுவார்த்தை சில காலமாகவே நடந்து வருகிறது.  ஆகவே, வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் இலங்கையின் நிலையான இயக்க முறையை பின்பற்றுகின்ற வரை பிரச்சினை இல்லை. அதேசமயம், அதனை பின்பற்றாவிட்டால் பிரச்சினைதான்.

மேலும், சீன விவகாரம் தொடர்பாக, இந்தியா நீண்டகாலமாக தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறது. அக்டோபர் 6-ம் தேதி இலங்கையில் சீன கப்பலை நிலைநிறுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக, இன்னமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எனினும், இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். மேலும், நமது பிராந்தியத்தை எப்போதும் அமைதியாக வைத்திருப்போம் என்று கூறிவருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: srilankachina shipForign minister
ShareTweetSendShare
Previous Post

பழம்பெரும் ஹிந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

Next Post

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மந்தனாவை சந்திக்க 1200 கி.மீ பயணம்.

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies