சீனா கப்பல் வருகைக்கு அனுமதி வழங்கவில்லை: இலங்கை மறுப்பு!
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனா கப்பல் வருகைக்கு அனுமதி வழங்கவில்லை: இலங்கை மறுப்பு!

இந்தியாவின் பாதுகாப்பு முக்கியம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 26, 2023, 03:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீன கப்பல் வருகைக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தைதான் நடந்து வருகிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனா 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவை உளவு பார்க்க சீனா திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் “யுவான் வாங் 5” என்கிற உளவுக்கப்பலை சீனா அனுப்பியது. இக்கப்பல், இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தில் ஒரு வாரம் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது, தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருக்கும் இந்திய பாதுகாப்பு சார்ந்த நிறுவனங்களை உளவு பார்த்தது.

இதையடுத்து, இலங்கைக்கு தனது கண்டனத்தை பதிவு செய்த இந்தியா, நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக இலங்கையிடம் தனது கவலையையும் தெரிவித்தது. மேலும், இனி இவ்வாறு நடக்காதவாறு பார்த்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தியது. இந்த சூழலில், “ஷியான் 6” என்கிற மற்றொரு உளவுக்கப்பலை, இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தில் நிலைநிறுத்துவதற்கு சீனா முயற்சித்து வருகிறது. இதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், இக்கப்பல் இந்தாண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி இலங்கைக்கு வரவிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, இலங்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் இந்தியா, தனது கவலையையும் வெளிப்படுத்தி இருந்தது. மேலும், இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இம்மாத தொடக்கத்தில் இலங்கைக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில்தான், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, “வெளிநாட்டுக் கப்பல்கள், விமானங்கள் இலங்கைக்கு வருவது குறித்து நிலையான இயக்க முறை (எஸ்.ஓ.பி.) ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இதுகுறித்து இந்தியா உள்ளிட்ட நேசநாடுகளுடன் கலந்தாலோசித்தும் இருக்கிறோம். இந்த பேச்சுவார்த்தை சில காலமாகவே நடந்து வருகிறது.  ஆகவே, வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் இலங்கையின் நிலையான இயக்க முறையை பின்பற்றுகின்ற வரை பிரச்சினை இல்லை. அதேசமயம், அதனை பின்பற்றாவிட்டால் பிரச்சினைதான்.

மேலும், சீன விவகாரம் தொடர்பாக, இந்தியா நீண்டகாலமாக தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறது. அக்டோபர் 6-ம் தேதி இலங்கையில் சீன கப்பலை நிலைநிறுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக, இன்னமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எனினும், இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். மேலும், நமது பிராந்தியத்தை எப்போதும் அமைதியாக வைத்திருப்போம் என்று கூறிவருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: srilankachina shipForign minister
Share
Tweet
SendShare
Previous Post

பழம்பெரும் ஹிந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

Next Post

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மந்தனாவை சந்திக்க 1200 கி.மீ பயணம்.

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies