அஜர்பைஜன் நாட்டின் ஸ்டெபனகெர்ட் பகுதியில் எரிவாயு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு திங்கட்கிழமை பிற்பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். இதில், சம்பவ இடத்தில் இருந்து 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஏழு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 290-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும், உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மூன்று தசாப்தக் கால பிரிவினைவாத ஆட்சிக்குப் பின்னர், அஜர்பைஜானின் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றுவதற்காக, கடந்த வாரம் இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கைக்குப் பின்னர், நாகோர்னோ-கராபாக்கின் வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்மீனியாவிற்குச் சென்று கொண்டிருந்த போது இந்த வெடி விபத்து ஏற்பட்டது.