துணைவேந்தர் தேந்தெடுக்கும் குழுவை கவர்னர் ஒப்புதல் இன்றி அமைக்க அரசுக்கு அதிகாரமில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமிக்க ஆளுநர் யு.ஜி.சி., பிரதிநியை நியமித்து இருந்தார். ஆளுநர் அமைத்த தேடுதல் குழுவுக்கு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து யு.ஜி.சி., பிரதிநிதியை தவிர்க்கப்பட்டு தமிழக அரசின் சார்பில் தேடுதல் குழு அமைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பாணை கடந்த 13 ஆம் தேதி அரசு வெளியிட்டது.
கடந்த 13 ஆம் தேதி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணை யுஜிசி மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும்.
அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையை திரும்ப பெற வேண்டும், அரசு உயர்கல்வித் துறை முதன்மைசெயலாளருக்கு அதிகாரமில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார்.