சென்னையில் பெண் வலது கை அகற்றம் – அரசு டாக்டர்கள் அலட்சியமா?
Jun 21, 2025, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் பெண் வலது கை அகற்றம் – அரசு டாக்டர்கள் அலட்சியமா?

Web Desk by Web Desk
Sep 27, 2023, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 32 வயது ஜோதி என்பவருக்கு வலது கை அகற்றப்பட்டதில் மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜீனத். இவரது மனைவி, ஜோதி (வயது 32) இவருக்கு மார்பு வலி காரணமாக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கடந்த 15 -ம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர், சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய பரிசோதனை செய்ய வந்தவருக்கு, டாக்டர்கள் அலட்சியம் காரணமாக. அவரது வலது கை அகற்றப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை தரப்பில், ஜோதி எனும் 32 வயது பெண்மணி தனியார் மருத்துவமனையில் ECG எடுத்துப் பார்த்ததில், இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரிய வந்ததால், மேற்படி சிகிச்சைக்காக, சென்னை அரசு இராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கே அவருக்கு Angiogram பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் அவருக்குப் பரிசோதனை செய்த கையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மற்றொரு கைக்கும் வீக்கம் பரவியுள்ளது. தொடர்ந்து பரிசோதித்துப் பார்த்ததில் அவருக்கு தமனிகளில் (Arteries)இரத்த அடைப்பு ஏற்பட்டது(Thrombosis)தெரிய வந்தது.

அதற்குக் காரணம் Idiopathic Systematic Arterial Thrombosis(காரணம் தெரியாத பல இடங்களில் இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு)என கண்டறியப்பட்டுள்ளது.

வலது கையில் அடைப்பு அதிகம் எற்பட்டு இரத்த ஓட்டம் தடைப்பட்டு,கை அழுகிய நிலைக்குச் சென்றதால் உயிரைக் காக்க வலது கை முழங்கைக்கு மேல் அகற்றப்பட்டது. என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை விளக்கம் கொடுத்துள்ளது.

ஆனால், அரசு மருத்துவமனையின் இந்த விளக்கத்தை ஜோதியின் கணவர் ஏற்க மறுத்துள்ளார். ஜோதிக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தனியார் மருத்துவமனையில் தெரிவித்தனர்.

ஆஞ்சியோ சிகிச்சை செய்யத் தனியார் மருத்துவமனையில் செலவு அதிகம் ஆகும் என்பதால், அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால், அவர்கள் அலட்சியம் மற்றும் உரிய பரிசோதனை செய்யாமல், ஜோதியின் வலது கையை அகற்றிவிட்டனர் எனக் குற்றம் சாட்டினார்.

மேலும், தனது மனைவிக்கு நேர்ந்த கதிக்குக் காரணமான டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோதியின் கணவர் ஜீனத் தெரிவித்துள்ளார். இல்லையெனில், சட்டப் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags: gh hospital
ShareTweetSendShare
Previous Post

உலகக் கோப்பை போட்டியில் அஸ்வின் விளையாடயாடுவாரா ?

Next Post

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 2.85 கோடி!

Related News

செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது!

இன்றைய தங்கம் விலை!

சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சர் குமாரசாமி ஆய்வு!

அமைதியின் திசையை காட்டும் யோகா – பிரதமர் மோடி பேச்சு!

மடிப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டெலிவரி ஊழியர் கைது!

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை – நயினார் நாகேந்திரன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

26 கி.மீ , 3 லட்சம் பேர் – பிரதமர் தலைமையில் நடைபெற்ற கின்னஸ் சாதனை யோகா!

இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான்!

வால்பாறை அருகே தாயின் கண்முன்னே சிறுமியை இழுத்து சென்ற சிறுத்தை!

இந்துக்களின் ஒற்றுமையையும், உரிமைகளையும் மீட்டெடுக்கும் மதுரை முருக பக்தர்கள் மாநாடு!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட இந்து முன்னணி, பாஜக தொண்டர்கள்!

11-வது சர்வதேச யோகா தினம் – விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பல அடக்குமுறைகள், தடைகளை கடந்து நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

முருக பக்தர்கள் மாநாடு – அறுபடை வீடு மாதிரி கோயில்களில் மதுரை ஆதீனம் தரிசனம்!

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : இந்தியாவின் புதிய க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை- சிறப்பு தொகுப்பு!

அலற வைக்கும் DRDO : நவீனமாகும் நாட்டின் ஆயுதக் களஞ்சியம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies