சென்னையில் பெண் வலது கை அகற்றம் – அரசு டாக்டர்கள் அலட்சியமா?
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் பெண் வலது கை அகற்றம் – அரசு டாக்டர்கள் அலட்சியமா?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 27, 2023, 01:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 32 வயது ஜோதி என்பவருக்கு வலது கை அகற்றப்பட்டதில் மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜீனத். இவரது மனைவி, ஜோதி (வயது 32) இவருக்கு மார்பு வலி காரணமாக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கடந்த 15 -ம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர், சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய பரிசோதனை செய்ய வந்தவருக்கு, டாக்டர்கள் அலட்சியம் காரணமாக. அவரது வலது கை அகற்றப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை தரப்பில், ஜோதி எனும் 32 வயது பெண்மணி தனியார் மருத்துவமனையில் ECG எடுத்துப் பார்த்ததில், இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரிய வந்ததால், மேற்படி சிகிச்சைக்காக, சென்னை அரசு இராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கே அவருக்கு Angiogram பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் அவருக்குப் பரிசோதனை செய்த கையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மற்றொரு கைக்கும் வீக்கம் பரவியுள்ளது. தொடர்ந்து பரிசோதித்துப் பார்த்ததில் அவருக்கு தமனிகளில் (Arteries)இரத்த அடைப்பு ஏற்பட்டது(Thrombosis)தெரிய வந்தது.

அதற்குக் காரணம் Idiopathic Systematic Arterial Thrombosis(காரணம் தெரியாத பல இடங்களில் இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு)என கண்டறியப்பட்டுள்ளது.

வலது கையில் அடைப்பு அதிகம் எற்பட்டு இரத்த ஓட்டம் தடைப்பட்டு,கை அழுகிய நிலைக்குச் சென்றதால் உயிரைக் காக்க வலது கை முழங்கைக்கு மேல் அகற்றப்பட்டது. என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை விளக்கம் கொடுத்துள்ளது.

ஆனால், அரசு மருத்துவமனையின் இந்த விளக்கத்தை ஜோதியின் கணவர் ஏற்க மறுத்துள்ளார். ஜோதிக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தனியார் மருத்துவமனையில் தெரிவித்தனர்.

ஆஞ்சியோ சிகிச்சை செய்யத் தனியார் மருத்துவமனையில் செலவு அதிகம் ஆகும் என்பதால், அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால், அவர்கள் அலட்சியம் மற்றும் உரிய பரிசோதனை செய்யாமல், ஜோதியின் வலது கையை அகற்றிவிட்டனர் எனக் குற்றம் சாட்டினார்.

மேலும், தனது மனைவிக்கு நேர்ந்த கதிக்குக் காரணமான டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோதியின் கணவர் ஜீனத் தெரிவித்துள்ளார். இல்லையெனில், சட்டப் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags: gh hospital
Share
Tweet
SendShare
Previous Post

உலகக் கோப்பை போட்டியில் அஸ்வின் விளையாடயாடுவாரா ?

Next Post

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 2.85 கோடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies