உலகக் கோப்பை போட்டியில் அஸ்வின் விளையாடயாடுவாரா ?
Mar 15, 2026, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக் கோப்பை போட்டியில் அஸ்வின் விளையாடயாடுவாரா ?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 27, 2023, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை ராஜ்கோட்டில் 3 வது போட்டி நடைபெறவுள்ளது.

நடந்து முடிந்த இரண்டுப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்று முன்னிலையில் உள்ளது. மேலும் உலகக் கோப்பைத் தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்குகிறது. அதில் இந்தியா தனது முதல் போட்டியை ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 8 ஆம் தேதி விளையாடுகிறது.

இந்நிலையில் இந்திய அணியை குறித்து முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பேசியுள்ளார். இது குறித்து அவர், ” 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணியில் கே.எல். ராகுல் மற்றும் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக உள்ளனர். அதனால் யாரை கீப்பிங் செய்ய வைப்பது என்னும் கேள்வி பெரியதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், ” கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக இருந்தால் 5-வது இடத்தில் பேட்டிங் செய்வார் ஸ்ரேயாஸ் 4வது இடத்தில் பேட்டிங் செய்வார். பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தரை விட அஸ்வின் சிறப்பாக விளையாடியதால் அஸ்வின் உலகக் கோப்பைக்கு விளையாட வாய்ப்புள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு அஸ்வின் பந்துவீச்சில் நம்பிக்கை உள்ளது” என்றும் கூறினார்.

அஸ்வின் உலகக்கோப்பையில் பங்குப் பெற்றால் அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் அஸ்வின் 8 வது இடத்தில் விளையாட வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

கிட்டத்தட்ட 20 மாதங்கள் இந்தியாவின் 50 ஓவர் அணியில் இருந்து வெளியேறிய அஸ்வின், சமீபத்தில் முடிவடைந்த ஆசியக் கோப்பையில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் காயம் அடைந்ததை அடுத்து, அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் அக்சர் படேல் பங்குபெற முடியாமல் போனபோதும் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வந்தார். ஆனால் அந்த போட்டியில் பேட்டிங் செய்யவோ இல்லை பந்துவீசவோ சுந்தருக்கு வாய்ப்புக் கிடையில்லை.

அடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியில் அஸ்வின் சிறப்பாக விளையாடி உள்ளதால் உலகக் கோப்பையில் இடம்பெற அஸ்வின்னுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

Tags: cricket world cupaswin cricket
ShareTweetSendShare
Previous Post

ஆதாரம் இருந்தால் கொடுங்கள்: கனடாவிடம் கேட்கும் அமைச்சர் ஜெய்சங்கர்!

Next Post

சென்னையில் பெண் வலது கை அகற்றம் – அரசு டாக்டர்கள் அலட்சியமா?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies