ஆதாரம் இருந்தால் கொடுங்கள்: கனடாவிடம் கேட்கும் அமைச்சர் ஜெய்சங்கர்!
Jun 13, 2026, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதாரம் இருந்தால் கொடுங்கள்: கனடாவிடம் கேட்கும் அமைச்சர் ஜெய்சங்கர்!

நடவடிக்கை எடுக்கத் தயார் எனவும் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 27, 2023, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று கனடாவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி இருக்கிறார்.

காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூலை மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தால் தூதர்கள் வெளியேற்றம், விசா நிறுத்தம் என இரு நாட்டு இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ‘வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் விவாதத்தில்’ பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கனடா அரசு இதுவரை எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. கனடாவில் கடந்த சில ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட குற்றங்கள் நிறைய நடந்திருக்கிறது.

இதுகுறித்து அந்நாட்டு அரசுக்கு பல்வேறு தகவல்களை அளித்திருக்கிறோம். தீவிரவாதத் தலைவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். அவர்களை ஒப்படைக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனால், கனடா அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக இது அனுமதிக்கப்படுகிறது என்பதே எங்களது கவலை.

எங்களது இராஜதந்திரிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதும், எங்களது துணை தூதரகங்கள் தாக்கப்படும் சூழலும் நிலவுகிறது. ஆகவே, உங்களிடம் குறிப்பிட்ட ஏதாவது ஆதாரம் இருந்தாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் தொடர்புடையதாக இருந்தாலோ எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அதைத் தெரிந்துகொள்ளவும், நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒரு விதத்தில் திருப்பம் இல்லாமல் படம் முழுமையடையாது” என்று கூறியிருக்கிறார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் குறித்து என்னிடம் கேள்வி எழுப்புவது பொருத்தமற்றது. நான் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவன் இல்லை என்று காட்டமாக பதிலளித்தார்.

Tags: Central MinisterJaishankarNewyork
ShareTweetSendShare
Previous Post

சச்சினின் சதத்தை முறியடிப்பதில் கோலிக்கு எண்ணம் இல்லை – டி வில்லியர்ஸ்

Next Post

உலகக் கோப்பை போட்டியில் அஸ்வின் விளையாடயாடுவாரா ?

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies