வளர்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது-மன்சுக் மாண்டவியா!
Oct 7, 2025, 02:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது-மன்சுக் மாண்டவியா!

Web Desk by Web Desk
Sep 27, 2023, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் மருந்து தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான தேசிய கொள்கையை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.

 மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் உற்பத்தித் துறையில் தற்சார்பை அடைவதற்கான  பயணத்தில் ஒரு முக்கியமான நாள் என மத்திய சுகாதாரம், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவிய கூறியுள்ளார்.

புது தில்லியில் மருந்து தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான தேசிய கொள்கையை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். அத்துடன் மருந்து தொழில்நுட்பத்துறையில் புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான திட்டத்தையும் அவர்  அறிமுகப்படுத்தினார்.

இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்த டாக்டர் மன்சுக் மாண்டவியா, மருந்துகளின் உலகளாவிய சந்தையில் இந்தியாவை அதிக பங்களிப்புக் கொண்ட நாடாக மாற்றுவதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்தும் என்று கூறினார். புத்தொழில் நிறுவனங்கள் மூலம் இளைஞர்களின் திறன்களுக்கு ஊக்கமளிக்கவும் இந்த கொள்கை உதவும் என்று கூறினார்.

வளர்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களை நாம் பெருமளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதற்காக, இமாச்சலப் பிரதேசம், விசாகப்பட்டினம் மற்றும் குஜராத்தில் மூன்று மொத்த மருந்து பூங்காக்களையும் , இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் நான்கு மருத்துவ சாதன பூங்காக்களும் உருவாக்கப்படுவதாக அவர் கூறினார். இது இந்த துறையை வலுப்படுத்த உதவும் என்று குறிப்பிட்டார்.

உயிர் காக்கும் மருந்துகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும், உலகளாவிய மருத்துவ ஏற்றுமதி மையமாக இந்தியா மாறுவதற்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று  கூறினார்.

இதன் மூலமாக  மட்டுமே இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களில் தன்னிறைவை அடைய முடியும் என்று தெரிவித்தார். தொழிற்சாலைகள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து, நம் நாடு, உலகின் தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகள், புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய ஆராய்ச்சிகளை உருவாக்க வேண்டும் என்று கூறினார். நமது முக்கிய தேவைகளுக்கு யாரையும் சார்ந்திருக்காத அளவில் நாம் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags: Mansukh Mandaviya
ShareTweetSendShare
Previous Post

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 2.85 கோடி!

Next Post

X என்னும் புதிய வைரஸ்

Related News

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies