ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒப்புதல்?-இந்திய சட்ட ஆணையக் குழு!
Aug 18, 2025, 10:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒப்புதல்?-இந்திய சட்ட ஆணையக் குழு!

Web Desk by Web Desk
Sep 27, 2023, 07:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய சட்ட ஆணையக் குழு, நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் “இறுதி பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவதற்கு முன், மீண்டும் இந்த விஷயத்தில் விவாதங்கள் மற்றும் ஆய்வு நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

“ஒரே நாடு, ஒரே தேர்தல்” எனும் முறையில் நாடு முழுவதும் மக்களவைக்கும் அனைத்து மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வர இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது.

இதனால் பெருமளவில் பொருள், நேர மற்றும் மனிதவள விரையங்கள் தடுக்கப்படுவதுடன், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் முக்கிய முடிவுகளை தொலைநோக்கோடு எடுப்பதற்கும் இது உதவும் என்பதால் இதனை தீவிரமாக ஆளும் பா.ஜ.க. அரசு பரிசீலித்து வருகிறது.

இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர் மட்ட கமிட்டி உருவாக்கப்பட்டது.

செப்டம்பர் 23ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆணைய இயக்குனர் என் கே சிங், முன்னாள் மக்களவை பொது செயலாளர் சுபாஷ் கஷ்யப் மற்றும் முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் பெற்ற குழுவின் முதல் கூட்டம் நடைப்பெற்றது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேர்தல் கமிஷனுக்கு ஏற்படும் செலவு கணிசமாகக் குறையும் என்று பாஜக வாதிடும் அதே வேளையில், இந்த நடவடிக்கை ஆளும் ஆட்சிக்கு தேவையற்ற ஆதாயத்தைக் கொடுக்கும் என்றும், இந்திய தேர்தல் செயல்முறையை கணிசமாக சீர்குலைக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

ஆனால் 2018 ஆம் ஆண்டில், நீதிபதி பிஎஸ் சவுகான் (ஓய்வு பெற்றவர்) தலைமையிலான 21 வது சட்ட ஆணையம் ஒரு வரைவு அறிக்கையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்றும் பரிந்துரைத்தது.  இந்திய சட்ட ஆணையக் குழு, நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் “இறுதி பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவதற்கு முன், மீண்டும் இந்த விஷயத்தில் விவாதங்கள் மற்றும் ஆய்வு நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து இந்திய சட்ட ஆணைய அறிக்கை தயார் செய்யும் பணி நிறைபெற்றதாகவும், 2024, 2029-ல் அமல்படுத்த திட்டம் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐந்து மாநிலங்களில் நவம்பர் அல்லது டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல்களும், அதைத் தொடர்ந்து 2024 மே-ஜூன் மாதங்களில் மக்களவைத் தேர்தல்களும் நடைபெறவுள்ளன.

மத்திய அரசாங்கத்தின் சமீபத்திய நகர்வுகள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்ட சில மாநில தேர்தல்களை, மக்களவை தேர்தலுடன் நடத்த அதிக  வாய்ப்பு உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

Tags: one nation one election
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலைக்கு நெருக்கடி இல்லை: கரு.நாகராஜன்!

Next Post

இந்தியாவின் பதக்கங்கள் அதிகரிக்கும் – அனுராக் தாகூர்!

Related News

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Load More

அண்மைச் செய்திகள்

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies