தேசியத் தலைமை சொல்லும்வரை எந்தக் கருத்தும் கூற மாட்டோம்: வானதி சீனிவாசன்!
Jan 14, 2026, 06:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசியத் தலைமை சொல்லும்வரை எந்தக் கருத்தும் கூற மாட்டோம்: வானதி சீனிவாசன்!

கூட்டணி விஷயங்களை தேசிய தலைமைதான் முடிவு செய்யும் எனவும் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 27, 2023, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசியத் தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும்வரை கூட்டணி தொடர்பாக நாங்கள் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. கூட்டணி விஷயங்களை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்று பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் கூறியிருக்கிறார்.

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தேசிய ஐனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எங்களது தேசியத் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். எங்கள் கூட்டணியில் உள்ள அனைவரும் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று நினைக்கின்றனர். இதில், யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.

கூட்டணிக்குள் அதிகமான கட்சிகளைக் கொண்டு வருவது, புதிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற பணிகளை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும். அவர்களது வழிகாட்டுதலின் பேரிலேயே மாநிலங்களில் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் நடக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் தனி செயல்பாடு, தனி சித்தாந்தம் இருக்கும். அதேபோல, அவர்கள் போற்றும் தலைவர்களும் இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவர் பரஸ்பர நட்புடன் இருப்பதுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி.

தற்போதைய நிலையில், கூட்டணி தொடர்பாக தேசியத் தலைமை எங்களுக்கு சில வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறது. மாநிலத் தலைவரும் தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்று சொல்லி இருக்கிறார். ஆகவே, எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தலைமைதான் வலியுறுத்தும், முடிவு செய்யும். மேலும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தேசியத் தலைமையிடம் நேரடியாகவே சொல்லி வருகிறார்கள்.

எனவே, தேசியத் தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும் வரை, நாங்கள் கூட்டணி தொடர்பாக எந்தத் தகவலும் சொல்ல விரும்பவில்லை. கூட்டணி விஷயங்களை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தேசியத் தலைமைதான் வழிநடத்தும்” என்றார்.

Tags: interviewkovaibjp mlaVanathi Srinivasan
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் பதக்கங்கள் அதிகரிக்கும் – அனுராக் தாகூர்!

Next Post

ரோபோ வழங்கிய ஒரு கப் தேநீரையை அருந்திய பிரதமர் மோடி!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies