தேசியத் தலைமை சொல்லும்வரை எந்தக் கருத்தும் கூற மாட்டோம்: வானதி சீனிவாசன்!
Jul 30, 2026, 09:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசியத் தலைமை சொல்லும்வரை எந்தக் கருத்தும் கூற மாட்டோம்: வானதி சீனிவாசன்!

கூட்டணி விஷயங்களை தேசிய தலைமைதான் முடிவு செய்யும் எனவும் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 27, 2023, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசியத் தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும்வரை கூட்டணி தொடர்பாக நாங்கள் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. கூட்டணி விஷயங்களை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்று பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் கூறியிருக்கிறார்.

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தேசிய ஐனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எங்களது தேசியத் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். எங்கள் கூட்டணியில் உள்ள அனைவரும் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று நினைக்கின்றனர். இதில், யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.

கூட்டணிக்குள் அதிகமான கட்சிகளைக் கொண்டு வருவது, புதிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற பணிகளை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும். அவர்களது வழிகாட்டுதலின் பேரிலேயே மாநிலங்களில் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் நடக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் தனி செயல்பாடு, தனி சித்தாந்தம் இருக்கும். அதேபோல, அவர்கள் போற்றும் தலைவர்களும் இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவர் பரஸ்பர நட்புடன் இருப்பதுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி.

தற்போதைய நிலையில், கூட்டணி தொடர்பாக தேசியத் தலைமை எங்களுக்கு சில வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறது. மாநிலத் தலைவரும் தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்று சொல்லி இருக்கிறார். ஆகவே, எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தலைமைதான் வலியுறுத்தும், முடிவு செய்யும். மேலும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தேசியத் தலைமையிடம் நேரடியாகவே சொல்லி வருகிறார்கள்.

எனவே, தேசியத் தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும் வரை, நாங்கள் கூட்டணி தொடர்பாக எந்தத் தகவலும் சொல்ல விரும்பவில்லை. கூட்டணி விஷயங்களை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தேசியத் தலைமைதான் வழிநடத்தும்” என்றார்.

Tags: interviewkovaibjp mlaVanathi Srinivasan
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் பதக்கங்கள் அதிகரிக்கும் – அனுராக் தாகூர்!

Next Post

ரோபோ வழங்கிய ஒரு கப் தேநீரையை அருந்திய பிரதமர் மோடி!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies