இந்தோ-பசிபிக் பிராந்திய பிரச்சனை: தீர்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்!
Jul 27, 2025, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தோ-பசிபிக் பிராந்திய பிரச்சனை: தீர்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Sep 27, 2023, 07:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இப்பிரச்சனைகளுக்குத் தீா்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகளின் இராணுவத் தலைமைத் தளபதிகள் பங்கேற்கும் 13-வது மாநாடு (ஐ.பி.ஏ.சி.சி.) டெல்லியில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ அதிகாரிகள் பங்கேற்றிருக்கிறார்கள். இம்மாநாட்டை முன்னிட்டு இராணுவ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இம்மாநாட்டை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசுகையில், “எல்லைப் பிரச்சனை, கடல்கொள்ளை என சிக்கலான பாதுகாப்புச் சவால்களை இந்தோ-பசிபிக் பிராந்தியம் எதிா்கொண்டு வருகிறது. இதற்கு, வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) என்கிற இந்திய அறநெறியின்படி, அமைதியையும், செழுமையையும் ஏற்படுத்த முடியும்.

ஒரே மாதிரியான சவால்கள் பல நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். பிற நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கையால் உருவாகும் சா்வதேச பிரச்சனைகளுக்கு, எந்தவொரு நாடும் தனிப்பட்ட முறையில் தீா்வுகாண முடியாது என்பதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, இந்தோ-பசிபிக் பிரச்சனைக்கு தீர்வுகாண ஒருங்கிணைந்த முயற்சி அவசியமாகும்” என்றாா்.

இந்திய இராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே பேசுகையில், “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் இறையாண்மை, எல்லை ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவிவரும் பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு காண்பது, போா்ப்படைகள் பயன்பாட்டைத் தவிா்ப்பது, சா்வதேச சட்டங்களைப் பின்பற்றுவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இந்தியாவின் இலக்காக உள்ளது” என்றார்.

Tags: 13th ConferenceRajnath SinghIndo-Pacific RegionChiefs of Army Staff
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் பிரதமர் மோடி!-மாபெரும் பேரணி

Next Post

அண்ணாமலைக்கு நெருக்கடி இல்லை: கரு.நாகராஜன்!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies