இந்தோ-பசிபிக் பிராந்திய பிரச்சனை: தீர்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்!
Apr 29, 2026, 09:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தோ-பசிபிக் பிராந்திய பிரச்சனை: தீர்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 27, 2023, 07:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இப்பிரச்சனைகளுக்குத் தீா்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகளின் இராணுவத் தலைமைத் தளபதிகள் பங்கேற்கும் 13-வது மாநாடு (ஐ.பி.ஏ.சி.சி.) டெல்லியில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ அதிகாரிகள் பங்கேற்றிருக்கிறார்கள். இம்மாநாட்டை முன்னிட்டு இராணுவ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இம்மாநாட்டை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசுகையில், “எல்லைப் பிரச்சனை, கடல்கொள்ளை என சிக்கலான பாதுகாப்புச் சவால்களை இந்தோ-பசிபிக் பிராந்தியம் எதிா்கொண்டு வருகிறது. இதற்கு, வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) என்கிற இந்திய அறநெறியின்படி, அமைதியையும், செழுமையையும் ஏற்படுத்த முடியும்.

ஒரே மாதிரியான சவால்கள் பல நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். பிற நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கையால் உருவாகும் சா்வதேச பிரச்சனைகளுக்கு, எந்தவொரு நாடும் தனிப்பட்ட முறையில் தீா்வுகாண முடியாது என்பதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, இந்தோ-பசிபிக் பிரச்சனைக்கு தீர்வுகாண ஒருங்கிணைந்த முயற்சி அவசியமாகும்” என்றாா்.

இந்திய இராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே பேசுகையில், “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் இறையாண்மை, எல்லை ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவிவரும் பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு காண்பது, போா்ப்படைகள் பயன்பாட்டைத் தவிா்ப்பது, சா்வதேச சட்டங்களைப் பின்பற்றுவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இந்தியாவின் இலக்காக உள்ளது” என்றார்.

Tags: Rajnath SinghIndo-Pacific RegionChiefs of Army Staff13th Conference
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் பிரதமர் மோடி!-மாபெரும் பேரணி

Next Post

அண்ணாமலைக்கு நெருக்கடி இல்லை: கரு.நாகராஜன்!

Related News

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies