இந்தோ-பசிபிக் பிராந்திய பிரச்சனை: தீர்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்!
Sep 14, 2026, 01:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தோ-பசிபிக் பிராந்திய பிரச்சனை: தீர்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 27, 2023, 07:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இப்பிரச்சனைகளுக்குத் தீா்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகளின் இராணுவத் தலைமைத் தளபதிகள் பங்கேற்கும் 13-வது மாநாடு (ஐ.பி.ஏ.சி.சி.) டெல்லியில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ அதிகாரிகள் பங்கேற்றிருக்கிறார்கள். இம்மாநாட்டை முன்னிட்டு இராணுவ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இம்மாநாட்டை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசுகையில், “எல்லைப் பிரச்சனை, கடல்கொள்ளை என சிக்கலான பாதுகாப்புச் சவால்களை இந்தோ-பசிபிக் பிராந்தியம் எதிா்கொண்டு வருகிறது. இதற்கு, வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) என்கிற இந்திய அறநெறியின்படி, அமைதியையும், செழுமையையும் ஏற்படுத்த முடியும்.

ஒரே மாதிரியான சவால்கள் பல நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். பிற நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கையால் உருவாகும் சா்வதேச பிரச்சனைகளுக்கு, எந்தவொரு நாடும் தனிப்பட்ட முறையில் தீா்வுகாண முடியாது என்பதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, இந்தோ-பசிபிக் பிரச்சனைக்கு தீர்வுகாண ஒருங்கிணைந்த முயற்சி அவசியமாகும்” என்றாா்.

இந்திய இராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே பேசுகையில், “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் இறையாண்மை, எல்லை ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவிவரும் பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு காண்பது, போா்ப்படைகள் பயன்பாட்டைத் தவிா்ப்பது, சா்வதேச சட்டங்களைப் பின்பற்றுவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இந்தியாவின் இலக்காக உள்ளது” என்றார்.

Tags: Rajnath SinghIndo-Pacific RegionChiefs of Army Staff13th Conference
Share
Tweet
SendShare
Previous Post

குஜராத்தில் பிரதமர் மோடி!-மாபெரும் பேரணி

Next Post

அண்ணாமலைக்கு நெருக்கடி இல்லை: கரு.நாகராஜன்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies