தமிழக வரைவு வாக்காளர் பட்டியல்: அக்டோபர் 27-ம் தேதி வெளியீடு!
Jan 14, 2026, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல்: அக்டோபர் 27-ம் தேதி வெளியீடு!

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 28, 2023, 12:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் அக்டோபர் மாதம் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியல், தற்போது அக்டோபர் 27-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சமயத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் போன்ற பணிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்யப்படும். இதன் பிறகு, ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அதேபோல, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கும் நாளன்று, சரிபார்ப்புக்கு வசதியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், இந்தாண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி தொடங்கும் என்றும், அன்றையதினமே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி திடீரென மாற்றப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் அக்டோபர் 17-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும தேதி மாற்றப்பட்டிருக்கிறது. அதன்படி, அக்டோபர் 17-ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 27-ம் தேதி வெளியிடப்படும்.

இதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அன்றைய தினமே வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளும் தொடங்கும். ஆகவே, அக்டோபர் 27-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடக்கும் காலக்கட்டத்தில் பொதுமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், டிசம்பர் 26-ம் தேதி வரை பரிசீலிக்கப்படும். பின்னர், இதனடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ம் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியல் திருத்த காலக்கட்டத்தில் ஆதார் இணைப்புக்கான விண்ணப்பத்தையும் அளிக்கலாம். பல மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் ஆதார் இணைப்புக்கான முகாம்களை நடத்தி வருகின்றன. ஆனால், நகர்ப்புறங்களில் ஆதார் இணைப்பு குறைவாக உள்ளது” என்றார்.

Tags: Tamil NaduElection commissionerReleaseddraft voter listoctober 27
ShareTweetSendShare
Previous Post

குடும்பப் பெருமையை மட்டுமே பேசுவது திமுகவுக்கு வழக்கம் பெருமையை மட்டுமே பேசுவது திமுகவுக்கு வழக்கம்-அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் – ப.சி-க்கு காங்கிரஸார் எச்சரிக்கை

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies