காவிரி விவகாரம்: நடிகர் ரஜினிக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!
Jul 26, 2025, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரி விவகாரம்: நடிகர் ரஜினிக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!

கர்நாடகாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்காவிட்டால்...!

Web Desk by Web Desk
Sep 28, 2023, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காவிட்டால், நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் நீண்டகாலமாகவே மோதல் இருந்து வருகிறது. காவிரி ஆணையமும், உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு சாதகமாகத் தீர்ப்புக் கூறினாலும், அதை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் இரு மாநில விவசாயிகள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. மேலும், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்கிற இடத்தில் அணைகட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருவது கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், இந்தாண்டு தமிழகத்துக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கும்படி காவிரி ஆணையமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டிருககின்றன. ஆனாலும், தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக மாநில அரசியல்வாதிகள் அடம் பிடித்து வருகிறார்கள். இதனிடையே, கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட்டிருக்கிறது. இதை கண்டித்து பெங்களூருவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மேலும், நாளையும் கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட சங்கங்கள் ஆதரவு அளித்திருக்கின்றன. இந்த சூழலில், கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நேற்று பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள முதல்வர் சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட முயற்சி நடந்தது. இவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து வாட்டாள் நாகராஜ் கூறுகையில், “எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது. இதை கண்டித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 29-ம் தேதி (நாளை) கர்நாடகாவில் மீண்டும் முழு அடைப்புப் போராட்டம் நடத்துகிறோம்.

இது ஒருபுறம் இருக்க, நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி பெங்களூருவுக்கு வந்து செல்கிறார். இங்கு இருந்தபோது ரஜினி காவிரி நீர் குடித்திருக்கிறார். ஆகவே, அவர் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். மேலும், கர்நாடகாவின் நிலையை எடுத்துக் கூற வேண்டும். இல்லாவிட்டால் அவரது படத்தை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Tags: Actor RajinikanthVatal NagarajCauvery issue
ShareTweetSendShare
Previous Post

குடியரசு துணைத்தலைவர் நாளை பீகார் பயணம்!

Next Post

திமுக பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறது!- அண்ணாமலை.

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies