காவிரி விவகாரம்: நடிகர் ரஜினிக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!
Jan 14, 2026, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரி விவகாரம்: நடிகர் ரஜினிக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!

கர்நாடகாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்காவிட்டால்...!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 28, 2023, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காவிட்டால், நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் நீண்டகாலமாகவே மோதல் இருந்து வருகிறது. காவிரி ஆணையமும், உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு சாதகமாகத் தீர்ப்புக் கூறினாலும், அதை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் இரு மாநில விவசாயிகள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. மேலும், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்கிற இடத்தில் அணைகட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருவது கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், இந்தாண்டு தமிழகத்துக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கும்படி காவிரி ஆணையமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டிருககின்றன. ஆனாலும், தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக மாநில அரசியல்வாதிகள் அடம் பிடித்து வருகிறார்கள். இதனிடையே, கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட்டிருக்கிறது. இதை கண்டித்து பெங்களூருவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மேலும், நாளையும் கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட சங்கங்கள் ஆதரவு அளித்திருக்கின்றன. இந்த சூழலில், கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நேற்று பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள முதல்வர் சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட முயற்சி நடந்தது. இவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து வாட்டாள் நாகராஜ் கூறுகையில், “எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது. இதை கண்டித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 29-ம் தேதி (நாளை) கர்நாடகாவில் மீண்டும் முழு அடைப்புப் போராட்டம் நடத்துகிறோம்.

இது ஒருபுறம் இருக்க, நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி பெங்களூருவுக்கு வந்து செல்கிறார். இங்கு இருந்தபோது ரஜினி காவிரி நீர் குடித்திருக்கிறார். ஆகவே, அவர் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். மேலும், கர்நாடகாவின் நிலையை எடுத்துக் கூற வேண்டும். இல்லாவிட்டால் அவரது படத்தை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Tags: Actor RajinikanthVatal NagarajCauvery issue
ShareTweetSendShare
Previous Post

குடியரசு துணைத்தலைவர் நாளை பீகார் பயணம்!

Next Post

திமுக பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறது!- அண்ணாமலை.

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies