காவிரி விவகாரம்: நடிகர் ரஜினிக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரி விவகாரம்: நடிகர் ரஜினிக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!

கர்நாடகாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்காவிட்டால்...!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 28, 2023, 12:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காவிட்டால், நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் நீண்டகாலமாகவே மோதல் இருந்து வருகிறது. காவிரி ஆணையமும், உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு சாதகமாகத் தீர்ப்புக் கூறினாலும், அதை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் இரு மாநில விவசாயிகள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. மேலும், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்கிற இடத்தில் அணைகட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருவது கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், இந்தாண்டு தமிழகத்துக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கும்படி காவிரி ஆணையமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டிருககின்றன. ஆனாலும், தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக மாநில அரசியல்வாதிகள் அடம் பிடித்து வருகிறார்கள். இதனிடையே, கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட்டிருக்கிறது. இதை கண்டித்து பெங்களூருவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மேலும், நாளையும் கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட சங்கங்கள் ஆதரவு அளித்திருக்கின்றன. இந்த சூழலில், கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நேற்று பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள முதல்வர் சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட முயற்சி நடந்தது. இவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து வாட்டாள் நாகராஜ் கூறுகையில், “எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது. இதை கண்டித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 29-ம் தேதி (நாளை) கர்நாடகாவில் மீண்டும் முழு அடைப்புப் போராட்டம் நடத்துகிறோம்.

இது ஒருபுறம் இருக்க, நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி பெங்களூருவுக்கு வந்து செல்கிறார். இங்கு இருந்தபோது ரஜினி காவிரி நீர் குடித்திருக்கிறார். ஆகவே, அவர் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். மேலும், கர்நாடகாவின் நிலையை எடுத்துக் கூற வேண்டும். இல்லாவிட்டால் அவரது படத்தை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Tags: Actor RajinikanthVatal NagarajCauvery issue
Share
Tweet
SendShare
Previous Post

குடியரசு துணைத்தலைவர் நாளை பீகார் பயணம்!

Next Post

திமுக பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறது!- அண்ணாமலை.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies