ராஜஸ்தானில் அமித்ஷா, நட்டா: விடிய விடிய ஆலோசனை!
Jan 14, 2026, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் அமித்ஷா, நட்டா: விடிய விடிய ஆலோசனை!

சட்டமன்றத் தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 28, 2023, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேற்று இரவு விடிய விடிய ஆலோசனை நடத்தினர்.

இந்தாண்டு இறுதியில் 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், ராஜஸ்தான் மாநிலமும் ஒன்று. தற்போது ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனினும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சச்சின் பைலட் முதல்வர் பதவி கேட்டு கட்சித் தலைமையை வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே, ராஜஸ்தானில் எதிர்கட்சியாக இருக்கும் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதையடுத்து, பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2 முறை ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசாரம் செய்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, ராஜஸ்தான் சென்றிருந்த பிரதமர் மோடி, ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான், ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான வியூகம் வகுப்பது குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேற்று ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்றனர். ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் தங்கிய இருவரும், மாலையில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் நள்ளிரவையும் தாண்டி அதிகாலை வரை நீடித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலில் இழுபறியாக இருப்பதாகக் கருதப்படும் இடங்களில் மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை களமிறக்க கட்சித் தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், 3 மத்திய அமைச்சர்கள் மற்றும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்திலும் மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை களமிறக்க பா.ஜ.க. தலைமை திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில், மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கிரோடி லால் மீனா, தியா குமார், சுக்வீர் சிங் ஜான்பூரியா ஆகியோரை களமிறக்கப்படலாம் என்று ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றிபெற்றால் மேற்கண்ட நபர்களில் யாரேனும் ஒருவர் மாநில முதல்வராகலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வரும், ராஜ பரம்பரையைச் சேர்ந்தவருமான வசுந்தரா ராஜே சிந்தியா, கட்சியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தபோதிலும், முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Tags: Amit ShahRajasthanJ.P.Nadda
ShareTweetSendShare
Previous Post

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற ஆடவர் அணி- பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

மிலாது நபி- அண்ணாமலை வாழ்த்து!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies