ராஜஸ்தானில் அமித்ஷா, நட்டா: விடிய விடிய ஆலோசனை!
Jun 4, 2026, 07:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் அமித்ஷா, நட்டா: விடிய விடிய ஆலோசனை!

சட்டமன்றத் தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 28, 2023, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேற்று இரவு விடிய விடிய ஆலோசனை நடத்தினர்.

இந்தாண்டு இறுதியில் 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், ராஜஸ்தான் மாநிலமும் ஒன்று. தற்போது ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனினும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சச்சின் பைலட் முதல்வர் பதவி கேட்டு கட்சித் தலைமையை வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே, ராஜஸ்தானில் எதிர்கட்சியாக இருக்கும் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதையடுத்து, பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2 முறை ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசாரம் செய்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, ராஜஸ்தான் சென்றிருந்த பிரதமர் மோடி, ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான், ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான வியூகம் வகுப்பது குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேற்று ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்றனர். ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் தங்கிய இருவரும், மாலையில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் நள்ளிரவையும் தாண்டி அதிகாலை வரை நீடித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலில் இழுபறியாக இருப்பதாகக் கருதப்படும் இடங்களில் மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை களமிறக்க கட்சித் தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், 3 மத்திய அமைச்சர்கள் மற்றும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்திலும் மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை களமிறக்க பா.ஜ.க. தலைமை திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில், மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கிரோடி லால் மீனா, தியா குமார், சுக்வீர் சிங் ஜான்பூரியா ஆகியோரை களமிறக்கப்படலாம் என்று ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றிபெற்றால் மேற்கண்ட நபர்களில் யாரேனும் ஒருவர் மாநில முதல்வராகலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வரும், ராஜ பரம்பரையைச் சேர்ந்தவருமான வசுந்தரா ராஜே சிந்தியா, கட்சியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தபோதிலும், முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Tags: RajasthanJ.P.NaddaAmit Shah
ShareTweetSendShare
Previous Post

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற ஆடவர் அணி- பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

மிலாது நபி- அண்ணாமலை வாழ்த்து!

Related News

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies