பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 5 கோடி!
Oct 27, 2025, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 5 கோடி!

Web Desk by Web Desk
Sep 28, 2023, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் 5 கோடியே 9 இலட்சத்து 13 ஆயிரத்து 830 ரூபாய் கிடைத்துள்ளது.

முருகனின் ஆறுப்படை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாம் படை வீடாக உள்ளது. இக்கோயிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனைப் பல்வேறு வகைகளில் செலுத்துகின்றனர். குறிப்பாக, தங்கம், பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றைக் காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கையானது உண்டியல் நிரம்பியவுடன், திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், வெள்ளிப் பொருட்கள், தங்கம், வெளிநாட்டுப் பணம் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து எண்ணுவர்.

அதன்படி, கோவில் உண்டியலிலிருந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் கோயில் மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கோயில் ஊழியர்களின் உதவியுடன் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது.

காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் முடிவில், 5 கோடியே 9 இலட்சத்து 13 ஆயிரத்து 830 ரூபாயும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் 1,366 கரன்சி நோட்டுகளும் காணிக்கையாகக் கிடைத்தன.

இதுதவிர தங்கச் சங்கிலி, மோதிரம், சிறிய வேல் உள்ளிட்ட 1,419 கிராம் மதிப்பிலான தங்கப்பொருட்களும், 18 கிலோ 185 கிராம் வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களும் காணிக்கையாகக் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேபோல், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் நேற்று திறந்து எண்ணப்பட்டது. இதில், கடந்த ஒரு மாத உண்டியல் வருமானமாக, 1 கோடியே 39 இலட்சத்து 22 ஆயிரத்து 935 ரூபாய், தங்கம் 216 கிராம் 200 மில்லி கிராமும், வெள்ளி 9 கிலோ 515 கிராமும் கிடைத்துள்ளது.

Tags: Palani Murugan temple
ShareTweetSendShare
Previous Post

 3 கோடி காணிக்கை!.. திருச்செந்தூரில் பக்தர்கள் தாராளம்!

Next Post

காவல்துறை சார்ந்த எழுத்துத் தேர்விலும் முறைகேடு- அண்ணாமலை கண்டனம்!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies