12 -ம் வகுப்பு புத்தகத்தில் உள்ள சனாதனம் என்ற பகுதி நீக்கப்படும் எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் இந்திய அறநெறியும் பண்பாடும் என்ற பாடத்தில், பல்வேறு மதங்கள் குறித்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், சனாதனம் என்றால் நிலையான அறம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து விளக்கமளித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அடுத்த ஆண்டு பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களில் சனாதனம் உள்ள பகுதி நீக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு, அப்படி நீக்கினால், தமிழக அரசியல் வரலாற்றில் தி முக என்ற கட்சியின் பகுதி காணாமல் போய் விடும் எனத் தமிழக பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதே போல, ஹிந்து அமைப்புகளும் அமைச்சரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.