சோம்நாத் கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு!
Jan 14, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோம்நாத் கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு!

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து நேர்த்திக்கடன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 28, 2023, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத், குஜராத் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சோம்நாத் மகாதேவ் கோவிலில் இன்று பிரார்த்தனை செய்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் பல்வேறு கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில், முதலில் கேரளாவில் உள்ள பௌர்ணமி காவு பத்ரகாளி கோவிலுக்குச் சென்றார். தொடர்ந்து, ஆந்திர மாநிலம் சுல்லூர்பேட்டா நகரில் உள்ள செங்களாம்மா கோவிலுக்குச் சென்றார்.

கோவில் பயணம் குறித்து சோம்நாத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “அறிவியலும் ஆன்மிகமும் இரண்டு வெவ்வேறு பகுதிகள். இரண்டையும் கலக்க வேண்டியதில்லை. நான் சந்திரனையும் ஆராய்கிறேன், ஆன்மாவையும் ஆராய்கிறேன். விஞ்ஞானம் மற்றும் ஆன்மிகத்தை ஆராய்வதற்கான எனது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி இது. இந்த பிரபஞ்சத்தில் நமது இருப்பு மற்றும் நமது பயணத்தின் அர்த்தத்தைத் தேடுவதற்காக பல கோவில்களுக்குச் செல்கிறேன்.

நான் பல கோவில்களுக்கு வருகிறேன். வேதங்களைப் படித்து, இந்த பிரபஞ்சத்தில் கலையின் அர்த்தத்தையும், நமது பயணத்தையும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். இது அகத்தையும் புறத்தையும் ஆராய்வதற்காக நாம் உருவாக்கிய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. நான் அறிவியலையும் செய்கிறேன். மன திருப்திக்காக கோவில்களுக்கும் வருகிறேன்” என்று கூறினார்.

இதற்கிடையே, அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA) 50-வது தேசிய மேலாண்மை மாநாட்டில் நேற்று உரையாற்றினார். அப்போது, “நாம் நமது அமிர்தகாலை அடையும்போது, ​​விண்வெளியில் நமது பொருளாதாரத்தின் பங்கு கணிசமானதாக இருக்கும். அது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைத் துறைகளில் வெளிவரும். ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை உருவாக்குவதன் மூலம் அல்ல, இந்தியாவில் பயன்பாடுகள், சேவைகள் மற்றும் உற்பத்தியை உருவாக்குவதன் மூலம்” என்றார்.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று வழிபாடு நடத்தி, சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். இதுகுறித்து சோம்நாத் கூறுகையில், “சந்திரயான்-3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்குவது எங்கள் முயற்சி என்றால், அது வெற்றிகரமாகத் தரையிறங்கியது எங்களது நல்ல அதிர்ஷ்டம். சோமநாதரின் ஆசீர்வாதத்தால் நாங்கள் பணியை நிறைவேற்ற முடிந்தது. இன்னும் மற்ற திட்டங்களிலும் நாங்கள் பணியாற்ற வேண்டும். அதற்கு, எங்களுக்குத் தேவை வலிமையும் ஆசீர்வாதமும்” என்று கூறினார்.

Tags: ISROChairmanSomnathGujratSomnath Temple
ShareTweetSendShare
Previous Post

பாய்மரப்படகுப் போட்டி : தமிழக வீரருக்கு பதக்கம்.

Next Post

திருவள்ளுவர் மண்ணில் தாமரை வெற்றிபெறும்: சி.டி.ரவி!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies