சோம்நாத் கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு!
Jul 25, 2025, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோம்நாத் கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு!

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து நேர்த்திக்கடன்!

Web Desk by Web Desk
Sep 28, 2023, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத், குஜராத் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சோம்நாத் மகாதேவ் கோவிலில் இன்று பிரார்த்தனை செய்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் பல்வேறு கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில், முதலில் கேரளாவில் உள்ள பௌர்ணமி காவு பத்ரகாளி கோவிலுக்குச் சென்றார். தொடர்ந்து, ஆந்திர மாநிலம் சுல்லூர்பேட்டா நகரில் உள்ள செங்களாம்மா கோவிலுக்குச் சென்றார்.

கோவில் பயணம் குறித்து சோம்நாத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “அறிவியலும் ஆன்மிகமும் இரண்டு வெவ்வேறு பகுதிகள். இரண்டையும் கலக்க வேண்டியதில்லை. நான் சந்திரனையும் ஆராய்கிறேன், ஆன்மாவையும் ஆராய்கிறேன். விஞ்ஞானம் மற்றும் ஆன்மிகத்தை ஆராய்வதற்கான எனது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி இது. இந்த பிரபஞ்சத்தில் நமது இருப்பு மற்றும் நமது பயணத்தின் அர்த்தத்தைத் தேடுவதற்காக பல கோவில்களுக்குச் செல்கிறேன்.

நான் பல கோவில்களுக்கு வருகிறேன். வேதங்களைப் படித்து, இந்த பிரபஞ்சத்தில் கலையின் அர்த்தத்தையும், நமது பயணத்தையும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். இது அகத்தையும் புறத்தையும் ஆராய்வதற்காக நாம் உருவாக்கிய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. நான் அறிவியலையும் செய்கிறேன். மன திருப்திக்காக கோவில்களுக்கும் வருகிறேன்” என்று கூறினார்.

இதற்கிடையே, அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA) 50-வது தேசிய மேலாண்மை மாநாட்டில் நேற்று உரையாற்றினார். அப்போது, “நாம் நமது அமிர்தகாலை அடையும்போது, ​​விண்வெளியில் நமது பொருளாதாரத்தின் பங்கு கணிசமானதாக இருக்கும். அது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைத் துறைகளில் வெளிவரும். ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை உருவாக்குவதன் மூலம் அல்ல, இந்தியாவில் பயன்பாடுகள், சேவைகள் மற்றும் உற்பத்தியை உருவாக்குவதன் மூலம்” என்றார்.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று வழிபாடு நடத்தி, சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். இதுகுறித்து சோம்நாத் கூறுகையில், “சந்திரயான்-3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்குவது எங்கள் முயற்சி என்றால், அது வெற்றிகரமாகத் தரையிறங்கியது எங்களது நல்ல அதிர்ஷ்டம். சோமநாதரின் ஆசீர்வாதத்தால் நாங்கள் பணியை நிறைவேற்ற முடிந்தது. இன்னும் மற்ற திட்டங்களிலும் நாங்கள் பணியாற்ற வேண்டும். அதற்கு, எங்களுக்குத் தேவை வலிமையும் ஆசீர்வாதமும்” என்று கூறினார்.

Tags: ISROChairmanSomnathGujratSomnath Temple
ShareTweetSendShare
Previous Post

பாய்மரப்படகுப் போட்டி : தமிழக வீரருக்கு பதக்கம்.

Next Post

திருவள்ளுவர் மண்ணில் தாமரை வெற்றிபெறும்: சி.டி.ரவி!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies