நாட்டின் வளர்ச்சிக்கோர் அற்புத திட்டம்!
Jan 14, 2026, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் வளர்ச்சிக்கோர் அற்புத திட்டம்!

'சங்கல்ப் சப்தாஹ்' திட்டத்தைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

Murugesan M by Murugesan M
Sep 29, 2023, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செப்டம்பர் 30-ம் தேதி ‘சங்கல்ப் சப்தாஹ்’ என்ற பெயரில் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் உள்ள 329 மாவட்டங்களில் உள்ள 500 வட்டாரங்களிலும் ‘சங்கல்ப் சப்தாஹ்’ கடைபிடிக்கப்படும். ‘சங்கல்ப் சப்தாஹ்’வில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கருப்பொருளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது, அதன் அடிப்படையில் அனைத்து ஆர்வமுள்ள வட்டாரங்களும்  செயல்படும்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘சங்கல்ப் சப்தாஹ்’ என்ற பெயரில் நாட்டில் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான  ஒரு வார கால தனித்துவமான திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காலை 10 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.

‘சங்கல்ப் சப்தாஹ்’ என்பது அபிலாஷை வட்டாரங்கள்  திட்டத்தை (ஏபிபி) திறம்பட செயல்படுத்துவதோடு இணைக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய இந்த திட்டம் ஜனவரி 7, 2023 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது.

குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக வட்டார அளவில் நிர்வாகத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் 329 மாவட்டங்களில் உள்ள 500 விருப்பமுள்ள வட்டாரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விருப்பமுள்ள வட்டாரங்கள்  திட்டத்தை செயல்படுத்தவும், பயனுள்ள தொகுதி மேம்பாட்டு உத்தியை தயாரிக்கவும், நாடு முழுவதும் கிராமம் மற்றும் வட்டார அளவில் சிந்தனை அமர்வுகள்  ஏற்பாடு செய்யப்பட்டன.

500 வட்டாரங்களிலும் ‘சங்கல்ப் சப்தாஹ்’ அனுசரிக்கப்படும். 2023 அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9, 2023 வரை ‘சங்கல்ப் சப்தாஹ்’ ல் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கருப்பொருளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

முதல் ஆறு நாட்களுக்கான கருப்பொருள்களில் ‘சம்பூர்ண ஸ்வஸ்தியா’, ‘சுபோஷித் பரிவார்’, ‘தூய்மை’, ‘கிரிஷி’, ‘சிக்ஷா’ மற்றும் ‘சம்ரிதி திவாஸ்’ ஆகியவை அடங்கும்.

வாரத்தின் கடைசி நாளான அக்டோபர் 9, 2023 ‘சங்கல்ப் சப்தாஹ் – சமவேஷ் சமரோஹ்’ என்ற பெயரில் வாரம் முழுவதும் நடத்தப்பட்ட பணிகளின் கொண்டாட்டமாக இருக்கும்.

பாரத் மண்டபத்தில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 3,000 பஞ்சாயத்து மற்றும் வட்டார   அளவிலான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். மேலும், வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 2 லட்சம் பேர் மெய்நிகர் முறையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modipm modi visit
ShareTweetSendShare
Previous Post

இம்ரான் கான் வழக்கறிஞர் தொலைக்காட்சி விவாதத்தில் கட்டிப்புரண்டு சண்டை!

Next Post

நட்சத்திர ஆய்வு செயற்கைகோள்: டிசம்பரில் செலுத்த இஸ்ரோ திட்டம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies