அக்டோபர் 1-ம் தேதி போபால் செல்லும் அமித்ஷா!
Jan 14, 2026, 02:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அக்டோபர் 1-ம் தேதி போபால் செல்லும் அமித்ஷா!

மத்தியப் பிரதேச மாநில தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 29, 2023, 03:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அக்டோபர் 1-ம் தேதி போபாலுக்குச் செல்வதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தாண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெறவுற்றது. இந்த 5 மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அதேபோல, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

எனினும், உட்கட்சிப் பூசலால் அக்கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறி பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்ததால், பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. ஆகவே, இம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் பகீரத முயற்சியில் இறங்கி இருக்கிறது.

அதேசமயம், பா.ஜ.க.வும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது. எனவே, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு பா.ஜ.க. தலைவர்கள் அடிக்கடி விஜயம் செய்து வருகின்றனர். சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காகவும், கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காகவும், வேட்பாளர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்காகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அக்டோபர் 1-ம் தேதி போபாலுக்கு வருகை தருகிறார்.

காலை 11:30 மணிக்கு போபாலுக்கு வரும் அமித்ஷா, கட்சி தலைமையகத்தில் சுமார் 3 மணி நேரம் தங்கி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாதிரி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. தலைமை இதுவரை 3 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை 79 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ள 151 இடங்களுக்கான பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 3-வது பட்டியலை பாஜக செவ்வாய்க்கிழமை வெளியிட்டது . இம்மாநிலத்தில் 3 மத்திய அமைச்சர்கள் மற்றும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் களம் காணுவது குறிப்பிடத்தக்கது.

Tags: Madya PradeshAmitshaOctober 1
ShareTweetSendShare
Previous Post

பகிரங்க மன்னிப்புக் கேட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

Next Post

பெங்களூருவில் 144 தடை உத்தரவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies