பகிரங்க மன்னிப்புக் கேட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
Sep 12, 2026, 09:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பகிரங்க மன்னிப்புக் கேட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

கடுமையான எதிர்ப்பால் பணிந்தார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 29, 2023, 03:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கனடாவில் காலிஸ்தான் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி இருந்தார். இந்த சூழலில், நாஜி படை வீரரை கௌரவப்படுத்திய விவகாரத்தில், கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜர், கனடா நாட்டில் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு இந்தியா மறுப்புத் தெரிவித்த போதிலும், அந்நாட்டுக்கான தூதரை வெளியேற்றியது கனடா. பதிலுக்கு இந்தியாவும் அந்நாட்டின் தூதரக உயர் அதிகாரியை வெளியேற்றி பதிலடி கொடுத்ததோடு, கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், மற்றொரு சர்ச்சையில் வாண்டடாகப் போய் வண்டியில் ஏறி இருக்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அதாவது, உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி, கடந்த வாரம் கனடா நாட்டுக்குச் சென்றிருந்தபோது, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டார். அப்போது, அங்கிருந்த உக்ரைன் நாட்டின் முன்னாள் இராணுவ வீரர் யாரோஸ்லாவ் ஹன்கா என்பவரை கனடா சபாநாயகர் அந்தோணி ரோட்டா நாடாளுமன்றத்தில் கௌரவித்தார். அதாவது, அவர் உக்ரைன் விடுதலைக்காகப் பாடுபட்டதாகக் கூறி, ஒட்டுமொத்த கனடா நாடாளுமன்றமும் எழுந்து நின்று கௌரவித்தது.

ஆனால், உண்மை என்னவென்றால் இராணுவ வீரர் யாரோஸ்லாவ் ஹன்கா போலந்து நாட்டைச் சேர்ந்த உக்ரைனியர் என்பதும், ஜெர்மனியின் நாஜி படையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, 2ி-ம் உலகப் போரின்போது, ஹிட்லரின் நாஜி படைகளில் ஒன்றான வாஃபென் எஸ்.எஸ். பிரிவில் பணியாற்றியவர். அப்போது, நாஜி படையினர் லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்ததை உலகம் மறக்காது. அப்படி இருக்க, நாஜி படை வீரரை கௌரவித்த கனடா நாட்டுக்கு உலகம் முழுவதும் உள்ள யூதர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, கனடா நாட்டை மிகக் கடுமையாக விமர்சித்தனர்.

இதன் பிறகு, உண்மை நிலவரம் தெரியவந்ததும், அவரது பின்னணி குறித்துத் தெரியாது என்றும், அவரை கௌரவித்தது தனது தனிப்பட்ட முடிவு என்றும் கூறி, கனடா நாடாளுமன்ற சபாநாயகர் அந்தோணி ரோட்டா மன்னிப்புக் கேட்டார். இந்த சூழலில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பேசுகையில், “இந்தச் சபையில் உள்ள அனைவர் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், நடந்த சம்பவத்திற்காக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைன் தூதர்கள் ஆகியோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். ஒருவரின் பின்னணி குறித்துத் தெரியாமல் அவரை கௌரவித்தது பயங்கரமான தவறு. இது நாஜி ஆட்சியின் கடுமையாகப் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வளவு பெரிய வலியைக் கொடுத்திருக்கும் என்பதை உணர முடிகிறது. இதற்காக நான் அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: CanadaPM Justin trudeauNazi
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மூடுவது குறித்து இந்தியா ஆய்வு!

Next Post

அக்டோபர் 1-ம் தேதி போபால் செல்லும் அமித்ஷா!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies