அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!
Mar 15, 2026, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்து ஆலோசனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 29, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் உயர்தர உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் விவாதித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 22-ம் தேதி அந்நாட்டுக்குச் சென்றார். தொடர்ந்து அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

குறிப்பாக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியவர், இந்தியா ஹவுஸில் வணிகம், நிர்வாகம் மற்றும் சிந்தனைக் குழுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் “எங்கள் வழக்கமான உரையாடல்கள் இந்தியா-அமெரிக்க உறவை வலுவாக வைத்திருக்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாயை சந்தித்த ஜெய்சங்கர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்தார். அதேபோல, அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனையும் சந்தித்து, இந்தாண்டு இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்தை அங்கீகரித்தோடு, அதை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து விவாதித்தனர்.

இது தவிர, உலகளாவிய மாற்றத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கு பற்றி சந்தனையாளர்கள் குழுவுடனான உரையாடலில் பங்கேற்றார். கடந்த 26-ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார். நாளை, வாழும் கலை அமைப்பினால் நடத்தப்படும் 4-வது உலக கலாச்சார விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் அமைச்சர் ஜெய்சங்கர், நாடு திரும்புகிறார்.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் உயர்தர உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விவாதித்தார். மேலும், ஜி20 இந்தியாவின் தலைமைப் பதவியின் முக்கிய முடிவுகள் குறித்தும் விவாதித்தனர். அதேபோல, வரவிருக்கும் 2+2 உரையாடலுக்கு முன்னதாக, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பின் தொடர் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

Tags: americaMinister jaishankar
ShareTweetSendShare
Previous Post

மசூதி அருகே இரட்டை குண்டுவெடிப்பு! 54 பேர் பலி!

Next Post

இலங்கை அரசு அழுத்தம்: நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies