அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!
Jul 26, 2025, 09:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்து ஆலோசனை!

Web Desk by Web Desk
Sep 29, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் உயர்தர உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் விவாதித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 22-ம் தேதி அந்நாட்டுக்குச் சென்றார். தொடர்ந்து அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

குறிப்பாக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியவர், இந்தியா ஹவுஸில் வணிகம், நிர்வாகம் மற்றும் சிந்தனைக் குழுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் “எங்கள் வழக்கமான உரையாடல்கள் இந்தியா-அமெரிக்க உறவை வலுவாக வைத்திருக்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாயை சந்தித்த ஜெய்சங்கர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்தார். அதேபோல, அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனையும் சந்தித்து, இந்தாண்டு இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்தை அங்கீகரித்தோடு, அதை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து விவாதித்தனர்.

இது தவிர, உலகளாவிய மாற்றத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கு பற்றி சந்தனையாளர்கள் குழுவுடனான உரையாடலில் பங்கேற்றார். கடந்த 26-ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார். நாளை, வாழும் கலை அமைப்பினால் நடத்தப்படும் 4-வது உலக கலாச்சார விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் அமைச்சர் ஜெய்சங்கர், நாடு திரும்புகிறார்.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் உயர்தர உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விவாதித்தார். மேலும், ஜி20 இந்தியாவின் தலைமைப் பதவியின் முக்கிய முடிவுகள் குறித்தும் விவாதித்தனர். அதேபோல, வரவிருக்கும் 2+2 உரையாடலுக்கு முன்னதாக, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பின் தொடர் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

Tags: americaMinister jaishankar
ShareTweetSendShare
Previous Post

மசூதி அருகே இரட்டை குண்டுவெடிப்பு! 54 பேர் பலி!

Next Post

இலங்கை அரசு அழுத்தம்: நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies