அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!
Jun 14, 2026, 06:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்து ஆலோசனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 29, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் உயர்தர உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் விவாதித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 22-ம் தேதி அந்நாட்டுக்குச் சென்றார். தொடர்ந்து அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

குறிப்பாக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியவர், இந்தியா ஹவுஸில் வணிகம், நிர்வாகம் மற்றும் சிந்தனைக் குழுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் “எங்கள் வழக்கமான உரையாடல்கள் இந்தியா-அமெரிக்க உறவை வலுவாக வைத்திருக்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாயை சந்தித்த ஜெய்சங்கர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்தார். அதேபோல, அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனையும் சந்தித்து, இந்தாண்டு இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்தை அங்கீகரித்தோடு, அதை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து விவாதித்தனர்.

இது தவிர, உலகளாவிய மாற்றத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கு பற்றி சந்தனையாளர்கள் குழுவுடனான உரையாடலில் பங்கேற்றார். கடந்த 26-ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார். நாளை, வாழும் கலை அமைப்பினால் நடத்தப்படும் 4-வது உலக கலாச்சார விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் அமைச்சர் ஜெய்சங்கர், நாடு திரும்புகிறார்.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் உயர்தர உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விவாதித்தார். மேலும், ஜி20 இந்தியாவின் தலைமைப் பதவியின் முக்கிய முடிவுகள் குறித்தும் விவாதித்தனர். அதேபோல, வரவிருக்கும் 2+2 உரையாடலுக்கு முன்னதாக, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பின் தொடர் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

Tags: americaMinister jaishankar
ShareTweetSendShare
Previous Post

மசூதி அருகே இரட்டை குண்டுவெடிப்பு! 54 பேர் பலி!

Next Post

இலங்கை அரசு அழுத்தம்: நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies