மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
Jan 14, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

மத்திய அரசிதழிலும் வெளியீடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 29, 2023, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, 1996-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால், இம்மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசில் 6 முறை கொண்டு வரப்பட்டும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து இம்மசோதாவை நிறைவேற்ற விடவில்லை. இதனால், கடந்த 27 வருடங்களாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு முடிவு செய்தது. குறிப்பாக, புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் மசோதாவாக பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா இருக்க வேண்டும் என்று விரும்பினர். எனவே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முதல் நாள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கிய நிலையில், விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் முடிந்து மறுநாள் புதிய நாடாளுமன்றத்துக்கு கூட்டம் இடம்பெயர்ந்தது. அப்போது, புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இம்மசோதாவுக்கு ஆதரவாக 454 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்தனர்.

இதைத் தொடர்ந்து, இம்மசோதா பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது. இதையடுத்து,  கடந்த 21-ம் தேதி மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 11மணி நேரம் விவாதத்திற்குப் பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இம்மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் 215 உறுப்பினர்களின் ஆதரவுடன் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.

இதையடுத்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் மாநிலங்களவைத் தலைவரும் ,துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டிருந்தார். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, இம்மசோதா சட்டமாக்கப்பட்டு, மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

Tags: PresidentWoman Reservation BillSign
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் அரசு அலுவலகத்தில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல்!

Next Post

தொடர் விடுமுறை: கடும் போக்குவரத்து நெரிசலில் பெங்களூரு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies