மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
Jul 26, 2025, 06:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

மத்திய அரசிதழிலும் வெளியீடு!

Web Desk by Web Desk
Sep 29, 2023, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, 1996-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால், இம்மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசில் 6 முறை கொண்டு வரப்பட்டும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து இம்மசோதாவை நிறைவேற்ற விடவில்லை. இதனால், கடந்த 27 வருடங்களாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு முடிவு செய்தது. குறிப்பாக, புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் மசோதாவாக பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா இருக்க வேண்டும் என்று விரும்பினர். எனவே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முதல் நாள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கிய நிலையில், விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் முடிந்து மறுநாள் புதிய நாடாளுமன்றத்துக்கு கூட்டம் இடம்பெயர்ந்தது. அப்போது, புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இம்மசோதாவுக்கு ஆதரவாக 454 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்தனர்.

இதைத் தொடர்ந்து, இம்மசோதா பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது. இதையடுத்து,  கடந்த 21-ம் தேதி மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 11மணி நேரம் விவாதத்திற்குப் பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இம்மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் 215 உறுப்பினர்களின் ஆதரவுடன் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.

இதையடுத்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் மாநிலங்களவைத் தலைவரும் ,துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டிருந்தார். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, இம்மசோதா சட்டமாக்கப்பட்டு, மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

Tags: PresidentWoman Reservation BillSign
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் அரசு அலுவலகத்தில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல்!

Next Post

தொடர் விடுமுறை: கடும் போக்குவரத்து நெரிசலில் பெங்களூரு!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies