இந்தியாவுடன் நெருங்கிய உறவு: கனடா பிரதமர் உறுதி!
Jul 27, 2025, 03:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுடன் நெருங்கிய உறவு: கனடா பிரதமர் உறுதி!

Web Desk by Web Desk
Sep 29, 2023, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மற்றும் முக்கியமான புவிசார் அரசியல் நாடான இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் கனடா தீவிரமாக இருக்கிறது என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார்.

காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜர் கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய குருத்துவாரவுக்கு முன்பு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலைக்கு பின்னணியில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ‘நம்பகமான குற்றச்சாட்டுகள்’ இருந்தபோதிலும், அந்நாட்டுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க கனடா உறுதிபூண்டிருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருப்பதாக தி நேஷனல் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது. மாண்ட்ரியலில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோ, “இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மற்றும் முக்கியமான புவிசார் அரசியல் நாடு.

மேலும், கடந்தாண்டு இந்தோ-பசிபிக் மூலோபாயத்தை நாங்கள் முன்வைத்தபடி, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறோம். அதேநேரம், வெளிப்படையாக சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடாக, இந்த விஷயத்தின் (ஹர்தீப் சிங் நிஜர் கொலை) முழு உண்மைகளையும் நாங்கள் பெறுவதை உறுதி செய்ய இந்தியா, கனடாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, ஹர்தீப் சிங் நிஜர் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து பகிரங்கமாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை, அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது எழுப்புவார் என்று அமெரிக்காவிடமிருந்து தனக்கு உத்தரவாதம் கிடைத்திருப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ கூயிருந்தார். ஆனால், இச்சந்திப்பின்போது, இந்தியா-கனடா விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IndiaCanadaPM Justin trudeau
ShareTweetSendShare
Previous Post

சாலையில் சுற்றித்திரியும் வெறி கொண்ட மாடுகளும், சென்னை மாநகராட்சியும்…!

Next Post

மேனகா காந்தியிடம் ரூ.100 கோடி நஷ்ட ஈடு – இஸ்கான் நோட்டீஸ்.

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies